Advertisment

ஹரியுடன் அடுத்த படம்... ஷூட்டிங் நடந்த கிராமத்தில் குடிநீர் வசதி செய்து கொடுத்த விஷால்

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Vishal

கிராம மக்களுக்கு உதவிய நடிகர் விஷால்

ஹரி இயக்கத்தில் தனது 34-வது படத்தில் நடித்து வரும் நடிகர் விஷால் படப்பிடிப்பு நடைபெறும் கிராமத்தில் மக்களுக்காக குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

Advertisment

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக விஷால் 34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் விஷால் அப்பகுதியில் உள்ள கிமரசக்கனாபுரம் என்ற கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது அங்குள்ள கிராம மக்களை சநதித்து பேசியுள்ளார். அப்போது அந்த கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாதது குறித்து தெரிந்துகொண்ட நடிகர் விஷால், அங்கு குடிநீர் வசதிக்காக தண்ணீர் தொட்டி கட்ட உதவி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷாலின் இந்த செயலுக்காக கிராம மக்களும் பாராட்டி நன்றி தெரிவித்தனர். இதனிடையே 'விஷால் 34' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெறும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. ஹரி விஷால் கூட்டணியில் ஏற்கனவே வெளியான தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment