Advertisment

திருமண ஆண்டு விழா... இளமையில் இருந்து முதுமை : ஐஸ்வர்யா ராய் பெற்றோரின் த்ரோபேக் போட்டோஸ்

தெலுங்கு மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்ய ராய், கடந்த 2007-ம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
Aishwarya Rai

நடிகை ஐஸ்வர்யா ராய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் வெளியிட்டுள்ள த்ரோபேக் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா, அதன்பிறகு இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தெலுங்கு மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்ய ராய், கடந்த 2007-ம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ஐஸ்வர்யா, ராவணன், குரு, உள்ளிட்ட படங்களில் தனது கணவருடன் இணைந்து நடித்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஃபன்னி கான் என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்ய அதன்பிறகு நடிக்கவில்லை.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்ய 4 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் திரைத்துறையில் என்டரி ஆனார். அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 படத்திலும் நடித்திருந்த ஐஸ்வர்யா, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவரை பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக ஐஸ்வர்யா ராய் வெளியிடும் பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராய், தனது பெற்றோரின் திருமண நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள 2 த்ரோபேக் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தனது பெற்றோர்களான விருந்தா மற்றும் கிருஷ்ணராஜ் ராய் ஆகியோரின் திருமண நாளான டிசம்பர் 22 அன்று இரண்டு த்ரோபேக் படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் முதல் படம் பெற்றோரின் இளமை காலத்தில் எடுக்கப்பட்டது. 2-வது புகைப்படம் அவரது தந்தை இறப்பதற்கு முன் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராய், "உங்களை நிச்சயமாக நேசிக்கிறேன், அன்பான அன்பான மம்மி-டோட்டா மற்றும் அப்பா-அஜ்ஜா உங்கள் திருமண ஆண்டு விழாவில் பிரார்த்திக்கிறேன் மற்றும்  கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரும் இதயம் கலந்த எமோஜியுடன் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். முன்னதாக, கடந்த நவம்பர் மாதம், தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஐஸ்வர்யா ராய் மூன்று படங்களைப் வெளியிட்டிருந்தார். இதில் முதல் படம் அவரது மகள் ஆராத்யா மறைந்த தந்தையுடன் இருப்பது, இரண்டாவது படம் தனது தந்தையுடன் ஐஸ்வர்ய ராய் இருப்பது, மூன்றாவது ஒன்றில், ஐஸ்வர்யா தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன், தனது மகள் மற்றும் தாயுடன் போஸ் கொடுப்பது போலவும் வெளியிட்டிருந்தர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aishwarya Rai Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment