கடந்த 2007ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிவேத்யம் என்ற படத்தின் மூலம் கேரள திரையுலகில் நுழைந்தவர் நடிகை பாமா. இவரது இயற்பெயர் ரெகிதா ராஜெந்திர குருப்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a25-1-252x300.jpg)
தொடர்ந்து, 'எல்லாம் அவன் செயல்' படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்த பாமா, சேவற்கொடி, ராமானுஜம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a22-300x194.jpg)
கடைசியாக மலையாளத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான மறுபடி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சில கன்னட திரைப்படங்களிலும் நடித்துவந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a23-1-300x211.jpg)
இந்நிலையில் நடிகை பாமாவுக்கு ஆலப்புழாவை சேர்ந்த அருண் என்ற தொழிலதிபர் ஒருவருடன் நேற்று (22.01.2020) நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இத்தகவலை பாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உறுது செய்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a24-1-300x190.jpg)
பாமா அக்கா கணவரின் நெருங்கிய நண்பராம் அருண். கனடாவில் படித்த அருண் சொந்தமாக தொழில் துவங்கி நடத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு பாமா படங்களில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a26-1-223x300.jpg)
பாமா, அருணுக்கு இந்த மாத இறுதியில் கொச்சியில் திருமணம் நடைபெற உள்ளது. இது பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாம்.