அவர்கள் நினைப்பது போல் நானில்லை... உடை சர்ச்சைக்கு நடிகை பாவனா பதிலடி

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனா கடைசியாக அஜித்தின் அசல் படத்தில் நடித்திருந்தார்.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனா கடைசியாக அஜித்தின் அசல் படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அவர்கள் நினைப்பது போல் நானில்லை... உடை சர்ச்சைக்கு நடிகை பாவனா பதிலடி

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பாவனா அணிந்திருந்த ஆடை சமூக வைலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு பாவனா பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

2002-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிம்மல் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து பல மலையாளப்படங்கில் நடித்த இவர், 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில். அஜித் ஜெயம் ரவி, மாதவன். உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தமிழில் கடைசியாக 2010-ம் ஆண்டு வெளியான அஜித்தின் அசல் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வந்த பாவனா 5 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் என்றேகாக்காக்கொரு பிரேமண்டார்ன்னு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாவனா அணிந்த உடை நெட்டிசன்களால கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements
publive-image

இந்த பதிவில்,

​​என் அன்புக்குரியவர்களைக் கவலைப் படாமல், என் துக்கங்களை ஒதுக்கித் தள்ள முயலும் போது, ​​ எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிக்கொண்டு தினமும் வாழ முயலும் போது, என்னைக் காயப்படுத்தி இருட்டில் விடுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். மீண்டும் நான் என்ன செய்தாலும் கெட்ட வார்த்தைகளால் என்னை விமர்சிக்கவும் செய்வார்கள். இப்படித்தான் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படி செய்தால் தான் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும் என்றால் அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பாவனா அணிந்திருந்த உடை உள்ளே அவர் எந்த ஆடையம் அணியவில்லை என்று பலர் விமர்சனம் செய்திருந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள அவர், நான் எனது ஸ்கின் கலரில் உடை அணிந்துள்ளேன் மற்றபடி அவர்கள் நினைப்பது போல் நான் உடை அணியவில்லை. அப்படி அணியும் நபரும் நான் இல்லை. இது போன்ற இடை அணிந்தவர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bhavana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: