/indian-express-tamil/media/media_files/Bv7mFwFzFyZPDOVZR6mJ.jpg)
சென்னை பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை கனிகா
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த வரலாறு காணாத தொடர் கனமழையால் சென்னை நகரின் வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிகரனை, முடிச்சூர், கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்தது.
மிக்ஜாம் புயலால் பெய்த தொடர் கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குடியிருப்பவர்கள் தத்தளித்து வருகின்றனர். இதனால், வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகளில் குடியிருப்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் தத்தளிப்பவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நடிகை கனிகா சென்னையில் தனது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் சிகித் தவித்ததாகத் தெரிவித்துள்ளார். பிறகு, மீட்புக் குழுவினர் வந்து மீட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
நடிகை கனிகா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது குடியிருப்பு பகுதியைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், வெள்ளநீர் சூழ்ந்துள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறுவது மட்டுமே சாத்தியமான தீர்வு என்று கனிகா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நடிகை கனிகா மற்றும் குடும்பத்தினர் வெள்ளம் சூழ்ந்த தனது வீட்டில் இருந்து மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டதைத் தெரிவித்துள்ளார். கனிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஆம், நாங்கள் மீட்கப்பட்டோம், குடிநீர் விநியோகம் இல்லை, மின்சாரம் இல்லை. வெள்ளநிர் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எங்களுக்கு வேறு வழியே இல்லை. மீட்புக் குழுவினருக்கும் அவர்களின் முயற்சிக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளம் சூழ்ந்ததால் சிக்கித் தவித்த நடிகை கனிகா குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மொத்தம் 150-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.