விஜய்க்கு ஜோடி, கேப்டனுக்கு தங்கை; 'நாளைய தீர்ப்பு' கீர்த்தனா இப்போ எப்படி இருக்கார்?

விஜயின் முதல் படத்தில் அவருக்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை கீர்த்தனா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் கடைசியாக நடித்த படம் பற்றி பார்ப்போம்.

விஜயின் முதல் படத்தில் அவருக்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை கீர்த்தனா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் கடைசியாக நடித்த படம் பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
vijay keerthana 1

2025 ஆம் ஆண்டு ஜெய், சத்யராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடித்த ஒரு நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படமான  'பேபி & பேபி' படத்தில் ஜெய்க்கு அம்மாவாக நடித்தவர் யார் என்று தெரிகிறதா ரசிகர்களே... பேபி & பேபி திரைப்படத்தில் ஜெய்க்கு அம்மாவாகவும் சத்யராஜுக்கு மனைவியாகவும் நடித்து இருப்பவர் நடிகை கீர்த்தனா. இந்தப் படத்தில், நடிகை கீர்த்தனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் 

Advertisment

90-களில் நடிகர் விஜய்யின் முதல் படமான 'நாளைய தீர்ப்பு'வில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தனா, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சமீபத்தில் வெளியான 'பேபி & பேபி' திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு அம்மாவாகவும், சத்யராஜுக்கு மனைவியாகவும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

1992-ஆம் ஆண்டு, தனது 15வது வயதில், நடிகர் விஜய்யின் அறிமுகப் படமான 'நாளைய தீர்ப்பு'வில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தனா. அதே ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'உழவன் மகன்' திரைப்படத்தில் அவருக்குத் தங்கையாகவும் நடித்தார். இந்தப் படங்களுக்குப் பிறகு, 'சூர்யன் சந்திரன்', 'பதவி பிரமாணம்', 'பவித்ரா' போன்ற படங்களில் நடித்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

vijay keerthana

Advertisment
Advertisements

லிட்டில் டாக்ஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தனா விஜய் உடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். நாளைய தீர்ப்பு படத்தின் முதல் நாள் சூட்டிங்கே நான் பஸ் ஸ்டாப்பில் நிற்பேன் விஜய் சைக்கிளில் வருவார், பின்னர் அவருடன் சைக்கிளில் முன்பக்கம் அமர்ந்து செல்லும் காட்சிதான் என்று கூறியுள்ளார். மேலும் விஜய் நல்ல டேன்சர், சூட்டிங் இல்லாத நாட்களில் கூட ரிஹர்சலுக்காக இருவரும் செல்வோம் என்றும் கூறியுள்ளார்.

திரைப்படங்களுக்குப் பிறகு, சின்னத்திரை பக்கம் திரும்பிய கீர்த்தனா, 'அக்ஷயா', 'ரோஜா', 'சலனம்', 'அன்பே வா' மற்றும் 'கோலங்கள்' போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து, சின்னத்திரை ரசிகர்களிடையேயும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்போது 'எதிர்நீச்சல்', 'செல்லம்மா', 'கனா' போன்ற சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்புத் துறையில் இருந்தாலும், கீர்த்தனாவின் சமீபத்திய ரீ-என்ட்ரி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பேபி & பேபி' திரைப்படத்தில், நகைச்சுவை கலந்த குடும்பப் பின்னணியில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது, அவரது அனுபவத்தையும், பன்முகத் திறமையையும் மீண்டும் நிரூபித்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: