2015-ல் கூட மழைநீர் தேங்கவில்லை... ஆனால், இப்போது வெளியே வரமுடியவில்லை... நடிகை கீர்த்தி பாண்டியன்

நடிகை கீர்த்தி பாண்டியன் சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தான் வசிக்கும் தெருவில் சூழப்பட்ட சாக்கடை நீரால் தான் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இரண்டு நாட்களாக தவித்தது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தான் வசிக்கும் தெருவில் சூழப்பட்ட சாக்கடை நீரால் தான் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இரண்டு நாட்களாக தவித்தது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Keerthi Pandian

நடிகை கீர்த்தி பாண்டியன்

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகள் மழைநீர் சூழ்ந்தது. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தவர்களை மீட்பு படையினர் படகுகளில் சென்று மீட்டனர். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும்  மேற்கொண்டு வருகிறது. 

Advertisment

மிக்ஜாம் புயலால் சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்ட விஷ்ணு விஷால், நமீதா, ஆமிர்கான், கனிகா போன்ற பிரபலங்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி பாண்டியன், தான் வசிகும் பகுதியில், 2015-ல் பெய்த மழைக்கு கூட இங்கே நீர் தேங்கவில்லை. ஆனால், தோண்டப்பட்ட பள்ளங்களால் மழை நீர் தேங்கியதாகவும் எங்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்லுங்கள் என்று சமூக வலைத் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன், சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தான் வசிக்கும் தெருவில் சூழப்பட்ட சாக்கடை நீரால் தான் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இரண்டு நாட்களாக தவித்தது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அதில் கீர்த்தி பாண்டியன் கூறியதாவது: “இந்த பகுதியில் எப்போதுமே மழை நீர் தேங்காது. குறிப்பாக 2015-ல் பெய்த மழைக்கு கூட இங்கே நீர் தேங்கவில்லை. ஆனால், கடந்த சில வருடங்களில் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் காரணமாக இந்த முறை மழை நீர் தேங்கியதுடன் சாக்கடை நீரும் சேர்ந்து கொண்டு தரைத்தளத்தில் வசிப்பவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எங்களை காப்பாற்றி அழைத்துச் செல்லுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

chennai flood

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: