தன்னைப்பற்றிய இயக்குனர் செய்த ட்விட்டால் கோபம் அடைந்த நடிகை மகிமா நம்பியார் தான் இனிமேல் இந்தியா பக்கமே வரமாட்டேன் என்று கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மகிமா நம்பியார். தொடர்ந்து தமிழில் சாட்டை படத்தின் மூலம் அறிமுகமான இவர், அருண்விஜயுடன் குற்றம் 23, சசிகுமாருடன் கொடிவீரன், விஜய் ஆண்டனியுடன் அண்ணாதுரை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்ற நிலையில், பல விருதுகளையும் பெற்று தந்தது. தற்போது தமிழில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் மகிமா நம்பியார், விஜய்ஆண்டனியுடன் 2-வது முறையாக ரத்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சி.எஸ்.அமுதன் இயக்கும் இந்த படத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரத்தம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது நடிகை மகிமா பஸ்சில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார். அப்போது அவர் வாயை பிளந்துகொண்டு தூங்குவதை படம் எடுத்த இயக்குனர் அமுதன் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ரத்தம் டீமின் கடின உழைப்பு என்று கூறி நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் மகிமா நம்பியாரை டேக் செய்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆமாம் இது கடின உழைப்புதான் என்று கருத்துக்களை வெளியிட மற்றும் சிலர் ஒரு பெண் தூக்கத்தில் இருக்கும்போது அவரின் அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பது தவறானது என்றும் கூறி வருகின்றனர். இதனிடையே இந்த படத்தை பார்த்து கடுப்பான மகிமா நம்பியார் அய்யோ அசிங்கம் இனிமேல் நான் இந்தியா பக்கமே வரமாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தயாரிப்பாளரின் கடின உழைப்பு படம் எங்கே என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், மகிமாவை கூல் செய்யும் விதமாக நடிகர் விஜய் ஆண்டனி, அவருடைய போட்டோவை பார்க்கும்போது என் போட்டோவை பார்ப்பது போல் உள்ளது என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“