/tamil-ie/media/media_files/uploads/2022/08/Nayanthara.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்ற இந்த திருமணம் தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
இதனைத் தொடர்ந்து தம்பதி ஹனிமூன் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிய நிலையில், அதன்பிறகு இருவரும் தங்களது படப்பிடிப்பில் பிஸியாக பணிகளை தொடங்கினர். இதில் நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும், விக்னேஷ் விசன் அடுத்து இயக்க உள்ள அஜித் படத்திற்காக வேலைகளிலும் பிஸியாகினர்.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தங்களதுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் நயன்தாராவும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டேம். எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. பிரார்த்தனைகள் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
Nayan & Me have become Amma & Appa❤️
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️😇
Need all ur blessings for our
Uyir😇❤️& Ulagam😇❤️ pic.twitter.com/G3NWvVTwo9— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022
இதற்கு உங்கள் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில்,திரைத்துரையினரும், ரசிகர்களும் நயன் விக்கி ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.