'மருமக தங்க மயிலுகிட்ட'.. நிரோஷாவுக்கு அட்வைஸ் செய்த பெண்!

“கோமதி இனி இப்படியே இருந்துக்கோமா. மருமக தங்க மயிலு கிட்ட உன் அதிகாரத்தை விட்டுக்கொடுத்திடாத” என பெண்மணி ஒருவர் நடிகை நிரோஷாவிடம் கூறியுள்ளார்.

“கோமதி இனி இப்படியே இருந்துக்கோமா. மருமக தங்க மயிலு கிட்ட உன் அதிகாரத்தை விட்டுக்கொடுத்திடாத” என பெண்மணி ஒருவர் நடிகை நிரோஷாவிடம் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Nirosha

நடிகை நிரோஷா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2ல் நடித்துவருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத் தொடரில் கோமதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடித்துவருகிறார்.
1990 கால கட்டங்களில் ராம்கி, கமல்ஹாசன், கார்த்திக் என முன்னணி கதாநாயகரகளுடன் ஒரு ரவுண்ட் வந்தவர் நிரோஷா. இவர் நடிகை ராதிகாவின் தங்கை ஆவார்.

Advertisment

1990 காலகட்டங்களில் பிஸியாக நடித்துவந்த நிரோஷா, செந்தூரப்பூவே படத்தக்கு பின்னர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து நிரோஷா கொஞ்சம் கொஞ்சமாக விலகினார்.
சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

Nirosha

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது, விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2வில் கோமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

Radhika Nirosha

இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து பேசிய நிரோஷா, “ஒரு முறை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்மணி, “உன் மருமக தங்க மயிலுகிட்ட அதிகாரத்தை கொடுத்திடாத மா.. கிச்சன் ரொம்ப முக்கியம். எக்காரணம் கொண்டும் அதை கொடுத்திடாத என்றார்”.இதைக் கேட்டதும் எனது கதாபாத்திரத்தை எவ்வளவு ஆழமாக ரசிக்கிறாங்க என்பதை புரிந்துக்கொண்டேன்” என்றார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Vijay Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: