நடிகை பூர்ணாவின் திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து புகைப்படம் வெளியிட்டு அவர் விளக்கம் அளித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் கண்ணணுரை சேர்ந்த வர் ஷாம்னா கஸிம். சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக்கொண்ட இவர், கடந்த 2004-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சு போலோரு பெண்குட்டி என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தார்.
தொடர்ந்து 2008-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் 3-ம் ஆண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து துரோகி, அர்ஜூனன் காதலி, ஆடுபுலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
தற்போது இவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிசாசு 2 படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில்,பூர்ணாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பூர்னா பதில் கொடுத்துள்ளார்
தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள பூர்ணா. எப்போதும் என்னுடையவர் என்றும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“