/tamil-ie/media/media_files/uploads/2021/09/218488087_610813249896933_2702608131500940500_n.jpg)
கண்ணான கண்னே சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை ப்ரியா ப்ரின்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று கண்ணான கண்னே. இந்த சீரியலில் நிமேஷிகா, ராகுல் ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் பப்லு ப்ரித்விராஜ், நித்யா தாஸ், ப்ரீத்தி சஞ்சீவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதைதான் இந்த சீரியலின் கதை. 200 எபிஷோடுகளைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து வில்லி நடிகை விலகியுள்ளார். இதில் வில்லி மேனகா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ப்ரியா ப்ரின்ஸ் சீரியலில் இருந்து விலகியுள்ளார். சீரியலில் இருந்து விலகுவதாக ப்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கண்ணான கண்னே சீரியலில் இருந்து விலகுகிறேன், சீரியல் குழுவுக்கு நன்றி, எல்லாம் நன்மைக்கே, என பதிவிட்டுள்ளார். ஆனால் விலகுவதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ப்ரியா தமிழ் கடவுள் முருகன், மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.