சினிமாவில் மீண்டும் நடிக்கத் தயார்; ஆனால்..? கண்டிஷன் போட்ட நடிகை ரம்பா

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, தனக்கு பிடித்தமான கதாபாத்திரம் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, தனக்கு பிடித்தமான கதாபாத்திரம் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rambha Movie

நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, தனக்கு பிடித்தமான கதாபாத்திரம் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். 

Advertisment

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தமிழில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரம்பா, விரைவிலேயே கோலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் அண்ட் ஹாட் நடிகையானார். விஜய், அஜித், ரஜினி, கார்த்திக், பிரசாந்த், மம்முட்டி, சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி பல மொழி படங்களில் நடித்த ரம்பா  தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே பெற்றிருந்தார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த பிறகு, நடிகை ரம்பா இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு  2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். ரம்பா அரிதாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். 

நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அண்மையில் தமிழ்நாடு வந்து, சென்னையில் நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்தார். விஜய் அரசியல் கட்சித் தொடங்கியுள்ளதால், இதனால், ரம்பா அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்விகள் எழுந்தன.

Advertisment
Advertisements

இந்த சூழலில்தான், நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ரம்பா கூறுகையில், “நான் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். அதன் பிறகு, சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏற்பட்டு விட்டது. நான் நடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் மீண்டும் நடிப்பீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பேன்” என்று ரம்பா தெரிவித்துள்ளார்.

தனக்கு பிடித்தமான கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்று நடிகை ரம்பா கூறியிருப்பது கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

rambha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: