Advertisment

குடும்பத்துடன் யாழ்பானத்தில் நடிகை ரம்பா : கோவிலில் வழிபாடு

ரம்பா 1993-ம் ஆண்டு தமிழில் பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
Rambha.

குடும்பத்துடன் நடிகை ரம்பா

90-களின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. 1992-ல் தெலுங்கில் வெளியான ஆ வொக்கட்டே அடக்கு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பல தெலுங்கு படங்களில் நடித்த ரம்பா 1993-ம் ஆண்டு தமிழில் பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

Advertisment

Rambha.

செங்கோட்டை, சுந்தரபுருஷன், தர்மசக்கரம், ராசி, உனக்காக எல்லாம் உனக்காக என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ரம்பா, முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்த ரம்பா தமிழ் தெலுங்கு மட்டுமல்லாமல், இந்தி, கன்னடா, மலையாளம், பெங்காலி, பேஸ்பூரி ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 என ஒரு சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ள ரம்பா, கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பதை திருமணம் செய்துகொண்டார். தற்போது டொரண்டோவில் செட்டில் ஆகிவிட்ட ரம்பா, தனது குடும்பத்துடன் யாழ்பானம் வந்துள்ளார். அங்கு மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.

Rambha.

ரம்பாவின் கணவர் இந்திரகுமாரின் முயற்சியால் யாழ்பானத்தில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைகழகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தில் சம்பிர்தாயபூர்வமாக பால் காய்ச்சி சாமி படம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

rambha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment