/tamil-ie/media/media_files/uploads/2018/10/2-14.jpg)
நாட்டாமை ராணி
பிரபல நடிகர் மீது பாலியல் புகார் அளித்த நாட்டாமை புகழ் நடிகை ராணி, திடீரென்று தனது புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்.
நாட்டாமை ராணி பாலியல் புகார்:
நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்தவர் நடிகை ராணி. இவரின் இந்த கதாபாத்திரம் அப்போது அதிகம் பேசப்பட்ட ஒன்று. கவுண்டமணியின் காமெடி காம்ஃபோவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானர் நடிகை ராணி.
தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாம்பு சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரபல நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் அளித்தார்.
ஒரு விளம்பர படத்தில் நடித்த போது சண்முகராஜன் தன்னை படுக்கைக்கு அழைத்தார். அவரின் ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றதும் எனது உடலில் அங்கும் இங்கும் தொட்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். என் கணவர் இதை தட்டிக் கேட்டபோது சண்முகராஜன் என்னை தாக்கினார் என ராணி அந்த புகாரிக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவரின் புகாரின் அடிப்படையில் சண்முகராஜனை சென்னை செங்குன்றம் காவல் துறையினர் கைது செய்தனர். சின்னத்திரை வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரிதாக பேசப்பட்டது.நேற்று முதல் இதுக் குறித்த பல்வேறு செய்திகள் தொடர்சியாக வெளியாகின.
இந்நிலையில், நடிகை ராணி, சண்முகராஜன் மீது அளித்திருந்த புகாரை திடீரென்று வாபஸ் வாங்கியுள்ளார். சண்முகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிகை ராணியிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ராணி தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.