இது மிகவும் வலிக்கிறது- ஒரு நடிகையாக இருப்பதன் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்திய ராஷ்மிகா!
ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படம் சமூக ஊடகங்களில் அலைகளை உருவாக்கியுள்ளது. இதனிடையே, ஒரு நடிகையாக இருப்பதன் இருண்ட பக்கத்தைப் பற்றி ராஷ்மிகா பேசியுள்ளார்.
ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படம் சமூக ஊடகங்களில் அலைகளை உருவாக்கியுள்ளது. இதனிடையே, ஒரு நடிகையாக இருப்பதன் இருண்ட பக்கத்தைப் பற்றி ராஷ்மிகா பேசியுள்ளார்.
Rashmika shared the non glamorous side of being an actor. (Photo: Rashmika Mandanna/Instagram)
ராஷ்மிகா மந்தனா தனது சமீபத்திய வெளியீடான புஷ்பா தி ரைஸின் வெற்றியில் மூழ்கி இருக்கிறார். ஆனால் அதை எப்படி உண்மையாக வைத்திருப்பது என்பது நடிகருக்குத் தெரியும்.
Advertisment
நடிகர்கள் ஒரு கவர்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று ஒருவர் நினைக்கும் போது, ராஷ்மிகா தனது ரசிகர்களுக்கு, கச்சிதமான இமேஜை தக்கவைத்துக்கொள்வது பற்றி ஒரு கண்ணோட்டம் கொடுத்தார்.
செவ்வாயன்று, ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் தனது கையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, முடி இல்லாமல் இருக்க தான் அனுபவிக்கும் வலியைப் பற்றி பேசினார்.
“உங்களில் எவரேனும் நல்ல நடிகராக வேண்டும் என்றால் அதில் நிறைய விஷயங்கள் உள்ளன.. உதாரணமாக: நீங்கள் எத்தனை முறை லேசர் செய்ய வேண்டும்.. அடடா.. அது மிகவும் வலிக்கிறது!"
Advertisment
Advertisements
ராஷ்மிகா மந்தனாவின் புஷ்பா தி ரைஸ் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளுகிறது. முன்னதாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்மிகா, படத்தில் தனது கதாபாத்திரம் குறித்துப் பேசியதுடன், “நான் முதல்முறையாக ஒரு இயல்பான ரோலில் நடித்தேன்.
ஒரு படமாக, புஷ்பா மிகவும் இயல்பானது. ஆனால் நான் எப்போதும் சொல்வது என்னவென்றால், இயக்குனர் சுகுமார் படத்திற்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கி இருக்கிறார். இது முன்னெப்போதும் இல்லாத மாதிரி வித்தியாசமான கதை.
முன் வெளியீட்டு விழாவில் நான் ‘புஷ்பா என் ஸ்ரீவள்ளிக்காக’ என்று சொன்னேன். ஸ்ரீவள்ளி ஒரு தந்திரமான விளையாட்டுத்தனமான கதாபாத்திரம்.
புஷ்பாவின் தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, படம் அதன் உலகளாவிய டிக்கெட் விற்பனையில் ரூ 173 கோடிகளை வசூலித்துள்ளது.
“எங்கள் புஷ்பா திரைப்படம் நாடு மற்றும் வெளிநாடுகளில் ஆல் டைம் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இவ்வளவு பெரிய வெற்றியை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. டிசம்பர் 17ஆம் தேதி வெளியான இப்படம் சுமார் ரூ.85 கோடி ஷேர்களுடன் ரூ.173 கோடி வசூல் செய்துள்ளது. வரும் நாட்களிலும் இப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் புஷ்பா தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news