'அப்படி நடிப்பது என் இஷ்டம்; செருப்பு பிஞ்சிரும்': மெரினாவில் பயில்வானுடன் நேரடியாக மோதிய ரேகா நாயர்
நடிகர் பயில்வான் ரேகா நாயர் குறித்து பேசுகையில், மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்தும் பேசியிருந்தார். அப்போது ரேகா நாயரும் சித்ராவும் நெருங்கிய தோழிகள் என்று குறிப்பிட்டிருந்தார் .
நடிகர் பயில்வான் ரேகா நாயர் குறித்து பேசுகையில், மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்தும் பேசியிருந்தார். அப்போது ரேகா நாயரும் சித்ராவும் நெருங்கிய தோழிகள் என்று குறிப்பிட்டிருந்தார் .
இரவில் நிழல் நடிகை ரேகா நாயர் குறித்து அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார்.
ஒரு காலத்தில் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துவந்தவர் பயில்வான் ரங்கநாதன். நீண்ட கால பத்திரிகையாளரான இவர் அண்மைக் காலமாக வலையொளி (யூடியூப்) சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் யூடியூப் சேனல்கள் என வெளிப்படையாக தெரிவித்தும் வருகிறார். இந்த நிலையில் இவர் அளிக்கும் பேட்டிகள் தெரிவிக்கும் கருத்துகள் உச்சக்கட்ட ஆபாசமாக இருப்பதாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்துவருகின்றன. நீண்ட காலமாக சினிமா துறையில் இருப்பதால் அங்கு நடக்கும் அந்தரங்க தகவல்களை பகிரங்கப்படுத்துகிறார். மேலும் சில நடிகைகள் மற்றும் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுகிறார். இது பெரும் விமர்சனம் ஆகிவருகிறது. இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் மீது தயாரிப்பாளர் ராஜன் உள்ளிட்ட திரையுலகினர் கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளித்துள்ளனர். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் நடிகை ராதிகா குறித்து இவர் பேசியது சர்ச்சையானது.
Advertisment
(Courtesy: Behindwoods)
இதனால் கடும் கோபமுற்ற ராதிகா, பயில்வான் ரங்கநாதனை திருவான்மியூர் கடற்கரையில் தாக்கியதாக கூறப்பட்டது. எனினும் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து யூடியூப்களில் நடிகை-நடிகர்களின் அந்தரங்கம் குறித்து வெளிப்படையாக பேசுகிறார். அண்மையில் பிரிந்த தனுஷ்-ஐஸ்வர்யா முதல் பழங்கால நடிகைகள் வரை இவர் விட்டுவைப்பதில்லை. இந்த நிலையில் இரவில் நிழல் நடிகை ரேகா நாயர் குறித்து அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார்.
Advertisment
Advertisements
இதனால் கடுங்கோபமுற்ற ரேகா நாயர், சென்னை மெரினா பீச்சில் நடிகர் பயில்வானை நாக்கை பிடுங்கும் வகையில் சரமாரியாக கேள்விகள் கேட்டு அடிக்க பாய்ந்தார். இந்தக் காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவிவருகின்றன. சென்னை மெரினா பீச்சில் நடிகை ரேகா நாயர், நடிகர் பயில்வான் ரங்கநாதனை பார்த்தபோது, நீ வந்து விளக்கு பிடிச்சியா? நான் எப்படி வேண்டும் என்றாலும் நடிப்பேன். அது என் தனிப்பட்ட உரிமை.. என் விருப்பம். அதைக் கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு? செருப்பு பிஞ்சிடும்” என்று அடிக்க பாய்ந்தார்.
இரவின் நிழல் படத்தில் நடிகை ரேகா நாயரின் காட்சிகள் ஆபாசமாக இல்லை என படம் பாரத்த பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் பயில்வானின் பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் பயில்வான் ரேகா நாயர் குறித்து பேசுகையில், மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்தும் பேசியிருந்தார். அப்போது ரேகா நாயரும் சித்ராவும் நெருங்கிய தோழிகள் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.