பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரெனன் விலகியது ஏன்? மீண்டும் நடிப்பேன் - மனம் திறந்த ரித்திகா

விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன் என்று நடிகை ரித்திகா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன் என்று நடிகை ரித்திகா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rithika Tamil Selvi

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன் என்று நடிகை ரித்திகா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன் என்று நடிகை ரித்திகா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பி-யில் கலக்கி வருகிறது. இந்த சீரியலில், ஆரம்பத்தில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ரித்திகா, அமைதியாகவும் அழகாகவும் தோற்றமளித்த ரிதிகாவுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். 

முதலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்த ரித்திகா, எலிமினேஷனில் வெளியேறினார்.

ஆனால், அவர் விரைவில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து ரசிகர்களுடன் கனக்ட் ஆனார். சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பாட்டு பாடி, காமெடி செய்து ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக இருந்தார்.

Advertisment
Advertisements

நடிகை ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே வினு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பு, நடிகை ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகினார். அப்போது, அதற்கான காரணம் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில்தான், கடந்த மாதம் தான் கர்ப்பமாக உள்ளதாக ரித்திகா கூறினார். தற்போது சீரியலில் இருந்து விலகியது ஏன் என்பதற்கான காரணத்தை ரித்திகா கூறியுள்ளார். சீரியலில் இருந்து விலகினாலும், இந்த காலகட்டத்தில், நடிகை ரித்திகா ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அண்மையில், ஒரு பேட்டியில் ரித்திகா பேசும்போது, திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க வேண்டும் என்று தான் இருந்தேன், யாரும் என்னை தடுக்கவில்லை. ஆனால் எனக்கு உடல் நிலையில் சில பிரச்சனைகள் வந்தது, அதனால்தான், நான் நடிப்பை விட்டு விலகி இருந்தேன். குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிக்க தொடங்குவேன் என கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: