/indian-express-tamil/media/media_files/dMa8cRESDBwBmsT3XttS.jpg)
பிரபல நடிகை ரிது வர்மா தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா? வதந்திகளுக்கு விளக்கம் அளித்த மெகா ஸ்டார் குடும்ப வாரிசு
பிரபல நடிகை ரிது வர்மா ஆந்திர மெகா ஸ்டார் குடும்பத்தைச் சேர்ந்த நடிகரை காதலிப்பதாக கூறப்படும் நிலையில், தெலுங்கு நடிகர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரிது வர்மா. அதன் பின்னர் நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்தார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரம்மாண்டமாக வெளிவர காத்திருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் ரிது வர்மா நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ரிது வர்மா தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த வைஷ்ணவ் தேஜ் என்பவரை காதலிக்கிறார் என தகவல் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திருமண நிகழ்ச்சியில் இந்த ஜோடி கலந்துக் கொண்டது தான்.
வருண் தேஜ் - லாவண்யா திருமணம் நடக்கவிருப்பதற்கு முன் நடிகர் அல்லு அர்ஜுன் திருமண ஜோடிக்கு விருந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் சிரஞ்சீவி குடும்பத்துடன் நடிகை ரிது வர்மாவும் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. அந்தப் புகைப்படங்கள் ஒன்றில் நடிகை ரிது வர்மாவும் நடிகர் வைஷ்ணவ் தேஜ்ஜூம் காணப்பட்டனர். அதன்பின் தான் வைஷ்ணவ் தேஜ் மற்றும் ரிது வர்மா காதலித்து வருகின்றனர் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காதல் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் வைஷ்ணவ தேஜ் கருத்து தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் திருமண பெண் லாவண்யாவின் தோழியாக தான் ரிது வர்மா கலந்துகொண்டார். அதற்கு மேல் எதுவும் இல்லை. காதல் என்று எல்லாம் வதந்தியை சொல்லி கொச்சை படுத்தாதீர்கள் என நடிகர் வைஷ்ணவ் தேஜ் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.