அன்புக்குரியவரின் இதயத்தை சந்தேகப்படாதீர்கள்; ஆயுத எழுத்து சரண்யா காதலருடன் புகைப்படம்
செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கி, இன்று ஆயுத எழுத்து, ரன் போன்ற சீரியல்களில் நடித்து கலக்கி வரும் நடிகை சரண்யா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் அன்புக்குரியவரின் இதயத்தை சந்தேகப்படாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கி, இன்று ஆயுத எழுத்து, ரன் போன்ற சீரியல்களில் நடித்து கலக்கி வரும் நடிகை சரண்யா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் அன்புக்குரியவரின் இதயத்தை சந்தேகப்படாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
actress sharanya turadi, vijay tv aayutha ezuthu serial, vijay tv serial actress sharanya turadi, விஜய் டிவி, சரண்யா காதலருடன் புகைப்படம், நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா, ரன் சீரியல், run serial, nenjam marappathillai serial actress sharanya, Sharanya turadi with her lover viral photo, vairal photo, viral news in tamil
செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கி, இன்று ஆயுத எழுத்து, ரன் போன்ற சீரியல்களில் நடித்து கலக்கி வரும் நடிகை சரண்யா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் அன்புக்குரியவரின் இதயத்தை சந்தேகப்படாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Advertisment
நடிகை சரண்யா முதலில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கினார். விரைவிலேயே விஜய் டிவியில் ஒளிபரபான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து பிரபலமானார்.
நெஞ்சம் மறப்பதில்லை தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகை சரண்யா, விஜய் டிவியில் ஆயுத எழுத்து, ரன் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். நடிகை சரண்யா ராகுல் சுதர்சன் என்பவரை காதலித்து வருகிறார். சரண்யா தனது காதலர் ராகுல் சுதர்சனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், சரண்யா தனது இஸ்டாகிராம் பக்கத்தில், அவரும் அவருடைய காதலரும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், “ஓ என்னை நேசிப்பதை தொடருங்கள்... உங்கள் அன்புக்குரியவரின் இதயத்தை சந்தேகிக்க வேண்டாம். எப்போதும் அந்த இதயம் உங்களுடையது... நம்முடையது... என்று பீத்தோவன் 1812-ம் ஆண்டு எழுதிய அவருடைய காதலிக்கு காதல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் எழுதியது வேறு நூற்றாண்டாக இருக்கலாம். ஆனால், ஃபீலிங் ஒன்றாகத்தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சரண்யா தனது காதலருடன் இருக்கும் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"