பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ரா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஷெர்லின் சோப்ரா, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவர். இவர் தமிழ் நடிகர் ஜீவன் உடன் யூனிவர்சிட்டி என்ற படத்தில் 2002ஆம் ஆண்டில் நடித்திருந்தார்.
Advertisment
தொடர்ந்து, பிளே பாய் என்ற ஆங்கில இதழுக்கு ஆடையின்றி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து சர்வதேச அளவில் புகழ் பெற்றார். இந்த நிலையில் இவர் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும்போது அவரிடம் நீங்கள் ராகுல் காந்தியை திருமணம் செய்துக்கொள்வீர்களா? எனக் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஷெர்லின் சோப்ரா, “நிச்சயமாக, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை” எனப் பதிலளித்துள்ளார். மேலும், “திருமணத்துக்கு பின்னர் சோப்ரா என்ற தனது சமூக பெயரை மாற்றிக் கொள்ள மாட்டேன்” எனவும் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். இதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆக்கிவருகின்றனர். முன்னதாக ஹரியானா பெண் ஒருவர் ராகுல் காந்தியின் தாயார் பிரியங்கா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் தொடர்பான பேச்சுகள் எழுந்தன.
Advertisment
Advertisements
அப்பெண இதனை சோனியா காந்தியிடம் கேட்க, அவர் நீங்களே ஒரு நல்ல பெண்ணை பாருங்கள் எனப் பதிலளித்தார். இந்த காணொலியை காங்கிரஸ் தொண்டர்கள் பரப்பிவருகின்றனர். இந்த நிலையில் ஷெர்லின் சோப்ரா ராகுல் காந்தியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னதாக ராகுல் காந்திக்கு மோடி தொடர்பான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது இந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இதனால் அவர் மீண்டும் மக்களவை சென்றுள்ளார். மேலும் அவர் தங்கியிருந்த பங்களாவும் அவருக்கு திரும்ப கிடைத்துவிட்டது. இதுதொடர்பான உத்தரவை மக்களவை செயலகம் இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“