நடிகை சினேகாவுக்கு அவருடைய இரண்டாவது பிரசவத்தில் கடந்த வாரம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து அவர், எனது வாழ்க்கையில் ஒரு தேவதை வந்துவிட்டாள் என்று கூறி அனைவரையும் நெகிழச் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்த சினேகா டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
சினேகா - பிரசன்னா தம்பதிகளுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, சினேகா அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/72276506_2417769295147875_3587974521278104111_n-1-300x300.jpg)
இந்த நிலையில், சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்ததாக செய்தி வெளியானது. சினேகாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததற்கு சமூக ஊடகங்களில் பலரும் அவருக்கும் குழந்தைக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து பகிர்ந்துகொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/83644816_168730567874319_6140473760342215854_n-2-300x300.jpg)
தற்போது, நடிகை சினேகா தனது இரண்டாவது பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் நிறைமாத கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, அதில், “கடந்த வாரம் இந்த முறை என் வாழ்க்கையில் ஒரு தேவதை வந்துள்ளாள். எனது வாழ்க்கை மேலும் அழகாக்க வந்துள்ளாள். எங்களுக்கு இவ்வளவு அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. விரைவில் மேலும் புகைப்படங்கள் வரும்.” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.