suntv serial news: சன்டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலை மறக்க முடியுமா?90ஸ்களின் பேவரேட்.. துளசி என்றால் நினைவுக்கு வருவது ஸ்ருதி ராஜ்தான். தனது எதார்த்தமான நடிப்பால் அனைத்து வயதினரும் ரசிக்கும்படி நடித்திருப்பார். ஆறு வருடங்கள் ஓடிய இந்த தொடரில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது பெற்றார் ஸ்ருதி ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதைதொடர்ந்து திருமதி செல்வம், விஜய் டிவியின் ஆபிஸ், ஜீ தமிழில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சன்டிவியின் அபூர்வ ராகங்கள் என பல தொடர்களில் நடித்தார். அதிலும் ஆபிஸ் சீரியலுக்கு ஏகப்பட்ட பேன்ஸ். பிறகு சன்டிவியில் அழகு சீரியலில் நடித்து வந்தார். வக்கீலாகவும் அன்பான மருமகளாகவும் அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
Advertisment
சிறிது நாட்கள் எந்த ஷூட்டிங்கும் இல்லாமல் சமூக வலைதளங்களில் பிஸியானார் ஸ்ருதி. இந்த நிலையில் மீண்டும் பிரம்மாண்டமாக சன்டிவியில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள தாலாட்டு என்னும் சீரியலில் ஸ்ருதி நடிக்க உள்ளார். இந்த சீரியலில் இவரது கணவராக 'தெய்வ மகள்' புகழ் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த ப்ரோமோவை பார்க்கும்போது, தாய் பாசத்தை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கிருஷ்ணாவிற்கு சிறு வயதிலேயே தாயின் அன்பு கிடைக்காமல் போய்விடுகிறது. தற்போது வளர்ந்து ஸ்ருதியுடன் திருமணம் ஆகியிருக்கும் நிலையில் அவருக்கு தாய் பாசம் கிடைக்குமா என்பது போல சீரியலின் கதை இருக்கப்போகிறது என தெரிகிறது.
Advertisment
Advertisements
பலரது ஃபேவரேட்டான ஆக்டர்ஸான கிருஷ்ணா - ஸ்ருதி ஜோடிக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ். விரைவில் இந்த சீரியல் நம்பர் 1 ஆக வரும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil