பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து, தமன்னா பந்தா காட்டுவதாகவும், சம்பளம் அதிகம் கேட்பதாகவும் செய்திகள் வந்தன. அவை அத்தனையையும் பொய்யாக்கி விட்டார் தமன்னா.
அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அருந்ததி நடிகைக்கு தான் அதிகம் ஸ்கோப் தரப்பட்டிருந்தது. தமன்னா ஒரே ஒரு காட்சியில் தான் வந்தார். ஆனால் அந்த படத்துக்கு பின் அவர் அதிக சம்பளம் கேட்பதாக செய்தி வந்தது. ஆனால் உண்மை அப்படி இல்லையாம். ஹீரோக்களை மட்டுமே பார்த்து நடிகை படங்களை ஒப்புக்கொள்கிறாராம். பெரிய ஹீரோ என்றால் சம்பளத்திலும் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறாராம்.
இறங்கி வந்தால் தான் மார்க்கெட் ஏறும் என்பதை புரிந்து கொண்டார் போல...!