மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

கோவை, மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை, மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trisha at temple

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் திரையுலகிற்கு வந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகிறது.

Advertisment

அண்மையில், திரிஷா நடித்த பொன்னியின் செல்வன், லியோ போன்ற திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றன. இது மட்டுமின்றி, அஜித் குமார், டொவினோ தாமஸ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் திரிஷா நடித்து வருகிறார்.

குறிப்பாக, நடிகர் சூர்யாவின் 45-வது திரைப்படத்திலும், திரிஷா பிரதான பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த 27-ஆம் தேதி மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்நிலையில், கோவை மருதமலை கோயிலில் நடிகை திரிஷா இன்று (டிச 15) சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவருக்கு சாமி படம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.

Advertisment
Advertisements

நடிகை திரிஷா சாமி தரிசனம் மேற்கொண்ட வீடியோவை, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Trisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: