Advertisment

'16 ஆண்டுக்கு முன்பே நிக்கோல் சந்திப்பு; ஆனா அப்போ லவ் இல்லை': காதல் கணவர் பற்றி வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்

நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் இருக்கிறார் என்றும், வரலட்சுமி சரத்குமார் அவரை 2-வது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் வெளியானது.

author-image
WebDesk
New Update
Varalakshmi Sarath

வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தனது வருங்கால கணவர் குறித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்களுக்கு இடையே காதல் உருவானது எப்படி என்பது குறித்து வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், சரத்குமார், ராதிகா, சரத்குமாரின் முதல் மனைவி சாயா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

அதே சமயம், நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் இருக்கிறார் என்றும், வரலட்சுமி சரத்குமார் அவரை 2-வது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 16 வயதில் தனது தந்தையின் தொழில்களை கவனிக்க தொடங்கிய நிக்கோலாய்க்கு, கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும், கவிதா கலிபோர்னியாவில் உலக அழகி பட்டம் வென்றவர் என்றும் கூறப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக நிக்கோலாய் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், பணத்திற்காக வரலட்சுமி சரத்குமார் நிக்கோலாய் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்த வரலட்சுமி என்னை பற்றி வரும் நெகடீவ் கருத்துக்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது. நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். என்னுடைய சம்பாத்தியத்தில் தான் நான் வாழ்கிறேன்.

நிக்கோலாய்யை திருமணம் செய்வது பணத்திற்காக என்று சொல்கிறார்கள். அந்த பணம் என்னிடமும் இருக்கிறது. சிலர் கற்பனைக்காக கண்டபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் திருமணம் செய்யவில்லை. 16 ஆண்டுகளுக்கு முன்பே நான் நிக்கோலாய் சந்தித்திருக்கிறேன். அப்போது நாங்கள் நட்புடன் இருந்தோம். அவர் அவரது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அதன்பிறகு சில மாதங்களுக்கு முன்பு எங்களுக்குள் ஒரு பினைப்பு ஏற்பட்டது. அவர் என் மீது வைத்திருக்கும் அன்பை பார்த்து எனக்கு காதல் வந்தது. அதன்பிறகு அவர் என்னுடைய அப்பா அம்மாவை சந்தித்து காதலை கூறியிருக்கிறார்.

அடுத்து நாங்கள் நார்வேக்கு ஃபேமிலி டூர் போனோம். அங்கு வைத்து தான் என் அப்பா அம்மா முன்னாடி நிக்கோலாய் காதலை சொன்னார். அவர் என்னுடைய உறவினர் கிடையாது. நிக்கோலாய் என் அப்பா போலவே இருப்பதாக சொல்கிறார்கள். அது எனக்கு சந்தோஷம் தான். ஏனென்றால் எனக்கு என் அப்பாவை மிகவும் பிடிக்கும் என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Varalakshmi Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment