பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவர் மத்தியிலும் நல்ல பெயரை பெற்று வரும் நடிகை விசித்ரா திரைத்துரையில் தான் சந்தித்த கசப்பான அனுபங்கள் குறித்து நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
1991-ம் ஆண்டு வெளியான பொற்கொடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விசித்ரா. தொடர்ந்து, கம்ஹாசனுடன் தேவர் மகன், விஜயகாந்துடன் எங்க முதலாளி, விஜயுடன் ரசிகன், ரஜினியுடன் முத்து என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்த விசித்ரா சத்யராஜூவின் 125-வது படமாக இயக்கி நடித்த வில்லாதி வில்லன் என்ற படத்தில் முக்கிய வில்லி கேரக்டரில் நடித்திருப்பார்.
திருணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய விசித்ரா தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் விசித்ரா, 20 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 50 நாட்களை நிறைவு செய்த போட்டியாளர்களுக்கு, அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையைப் பற்றி பேச ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்கில் பேசிய விசித்ரா, 2001 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பாலியல் தொந்தரவு ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகு இந்த சம்பவம் குறித்து நடிகர்கள் சங்கத்தில் புகார் செய்திருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் காவல் நிலையத்திற்கு செல்லாமல் நடிகர் சங்கத்தில் புகார் செய்வது ஏன் என்று கேட்டனர்.
அதேபோல் கேரளாவில் உள்ள மலம்புழாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, படத்தில் தன்னுடன் பணியாற்றிய ஒருவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார். அந்த படத்தின் படத்தின் ஹீரோ முதலில் என்னை சந்தித்தபோது, படத்தில் வேலை இருக்கீங்களா என்று விசாரித்துவிட்டு தனது அறைக்கு வரச்சொன்னார். ஆனால் நான் அவரது அறைக்கு செல்லவில்லை. அன்றில் இருந்து தினமும் மாலை மற்றும் இரவு நேரத்தில் பல ஆண்கள் என்னை தொந்தரவு செய்தனர்.
ஒரு கட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் எனது அறைக் கதவு எப்பொழுதாவது தட்டப்படும் என்று தெரிந்ததால், இந்த துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு நாளும் எனது அறையை மாற்றிக்கொண்டே இருந்தேன். அதன்பிறகும் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை தகாத முறையில் தொட்டனர். இந்த பிரச்சனையை இயக்குனரிடம் எடுத்துரைத்தபோது, அவர் அறைந்துவிட்டார். அன்றுடன் நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேன் என்று தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
#BiggBossTamil7 SHOCKING - #Vichitra shares her bad experiences while shooting for a Telugu film 🙄😮#BiggBoss7Tamil #BiggBossTamilSeason7pic.twitter.com/AUnwTIxv6r
— VCD (@VCDtweets) November 21, 2023
இதனிடையே விசித்ரா தெலுங்கு படத்தில் பணியாற்றியபோது, ஸ்டண்ட் காட்சி படமாக்கப்படும்போது ஒரு துணை நடிகர் தன்னிடம் பாலியல் நோக்கத்துடன் நடந்துகொண்டதாகவும், அவரை அந்த ஸ்டண்ட் இயக்குனரிடம் பிடித்து கொடுத்தபோதும் அவர் தனது கண்ணத்தில் அறைந்தார் என்றும் கூறியிருந்தார். விசித்ராவின் இந்த பேச்சை வைத்து நெட்டிசன்கள் பலரும் இது என்ன படம் என்பதை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
#Vichithra's harrowing experience was in this movie!!
— Bad Boss (@StoryTimeWithK) November 21, 2023
It's frickin sad that some women will still be going thru this as he is still active in the industry 🤮#BiggBossTamil #biggbosstamil7 pic.twitter.com/DFH4znigoC
அந்த வகையில் இந்த படம், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பலேவடிவி பாசு என்ற படத்தில் நடந்தாகவும், இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக விஜய் பணியாற்றியதாகவும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.