அதிதி சொன்ன கடி ஜோக்: ரசிகர்கள் ஷாக்

மதுரை திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த நடிகை அதிதி, ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் பாடல் பாடி, கடி ஜோக் சொல்லியுள்ளார்.

மதுரை திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த நடிகை அதிதி, ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் பாடல் பாடி, கடி ஜோக் சொல்லியுள்ளார்.

author-image
WebDesk
New Update
அதிதி சொன்ன கடி ஜோக்: ரசிகர்கள் ஷாக்

மதுரை திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த நடிகை அதிதி,  ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் பாடல் பாடி, கடி ஜோக் சொல்லியுள்ளார்.

Advertisment

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கி உள்ள விருமன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய படங்கள் என்றாலே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விடுவார்கள். இந்நிலையில், முதல் முறையாக அவரது மகள் அதிதி ஷங்கர் எப்படி நடித்து இருக்கிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு திரண்டு வருகின்றனரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார் அதிதி ஷங்கர் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரையிடலின்போது நடிகர் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் கலந்துகொண்டனர். அப்போது ரசிகர்களின் கேட்டுகொண்டதால் கடி ஜோக் ஒன்றை சொன்னார் அதிதி. மேலும் மதுரை வீரன் பாடலை பாடி அசத்தினார்.  ” சண்டே அண்ணைக்கு சண்டை போடலாம். ஆனால் மண்டே அன்னைக்கு மண்டையப் போட முடியுமா” என்ற கடி ஜோக்கை  நடிகை அதிதி கூறினார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: