காதலுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ‘நமக்கு எது தேவையோ அது வந்து சேரும்’

ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் ஒரு மியூசிக் வீடியோவை இயக்கிக் கொண்டிருந்தபோது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் ஒரு மியூசிக் வீடியோவை இயக்கிக் கொண்டிருந்தபோது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

author-image
WebDesk
New Update
dhanush-asihwaryaa

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போதுதான் கொரோனா தொற்றில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறார். அவரும் கணவர் தனுஷும் கடந்த மாதம் பிரிந்ததாக அறிவித்தனர்.

Advertisment

இப்படி ஒரு சூழலில்’ ஐஸ்வர்யா, இப்போது காதல் பற்றிய தனது எண்ணம் குறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில், ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஐஸ்வர்யா, காதல் என்ற எண்ணமும் தன்னுடன் சேர்ந்து வளர்ந்ததாகக் குறிப்பிட்டார். காதலுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

"வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் சமாளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எது வந்தாலும் அதை நாம் தான் சமாளிக்க வேண்டும். கடைசியில் நமக்கு எது தேவையோ அது வந்து சேரும்” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறினார்.

Advertisment
Advertisements

ஐஸ்வர்யாவிடம் மீண்டும் அன்பைக் கண்டுபிடிக்கத் தயாராக இருக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, ​​​​"நான் என் தந்தையை நேசிக்கிறேன். நான் என் அம்மாவை நேசிக்கிறேன். நான் என் குழந்தைகளை நேசிக்கிறேன். எனவே அன்பை ஒரு தனிமையில் கட்டுப்படுத்தக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

மேலும் காதலுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பதைப் பொறுத்த வரையில், ஆம், நான் விரும்புகிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

ஐஸ்வர்யா ஹைதராபாத்தில் ஒரு மியூசிக் வீடியோவை இயக்கிக்கொண்டிருந்தபோது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முன்னதாக, ஜனவரியில், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். “பதினெட்டு வருடங்கள் நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் இருந்தோம். இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம், ”என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தனர்.

தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush Aishwarya Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: