Advertisment

அமிதாப் பச்சன் பர்த்டே போட்டோவில் மாமியார் படத்தை மறைத்த ஐஸ்வர்யா ராய்: கண்டுபிடித்து கலாய்த்த நெட்டிசன்கள்

ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட க்ராப் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நவ்யா நவேலி நந்தா ஒரிஜினல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Amitabh Bachchan

அமிதாப் பச்சனின் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ராய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நேற்று தனது 81வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அவரது மருமகளும் பிரபல நடிகையுமான உலக அழகி ஐஸ்வர்யா ராய், வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அமிதாப் பச்சன். தனது நடிப்பின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தில் கமிட் ஆகியுள்ள அமிதாப் பச்சன் நேற்று தனது 81-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு திரையுலக நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அவரது மருமகளும், நடிகையுமான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது மகளுடன் அமிதாப் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த புகைப்படம் வைரலாக பரவிய நிலையில். இதன் ஒரிஜினல் புகைப்படத்தின் அமிதாப் தனது குடும்பத்துடன் இருப்பது போன்று உள்ளது.

இந்த புகைப்படத்தை கட் செய்த ஐஸ்வர்யா ராய் அமிதாப் தனது மகள் ஆராத்யாவுடன் இருப்பது போன்று வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரிஜினல் புகைப்படத்தில், அமிதாப் தனது மனைவி ஜெயா பச்சன் மற்றும் அவரது பிற பேரக்குழந்தைகள் நவ்யா நவேலி நந்தா மற்றும் அகஸ்தியா நந்தா (மகள் வழி)ஆகியோருடன் இருக்கிறார். ஆனால் இந்த புகைப்படத்தை க்ராப் செய்த ஐஸ்வர்யா அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுடன் மட்டும் இருக்கும் வகையில் வெளியிட்டிருந்தார்.

Amitabh

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதன் ஒரிஜினல் புகைப்படத்தை நவ்யா நவேலி நந்தா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனிடையே போட்டோவை க்ராப் செய்தது தொடர்பான ஐஸ்வர்யா ராய் குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. ஜெயா பச்சன் மற்றும் அவரது மகள் ஸ்வேதா பச்சன் (அபிஷேக் பச்சன் சகோதரி) ஆகியோர் பாரிஸ் பேஷன் வீக்கில் கலந்து கொண்டனர். அங்கு நவ்யா நவேலி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் ராம்ப் வாக் செய்தனர். அப்போது ஜெயா பச்சனும் ஸ்வேதாவும் ஐஸ்வர்யாவை டேக் செய்து வாழ்த்தவில்லை என்றும், அதற்கு பதிலான நவ்யாவை உற்சாகப்படுத்த அவர்கள் வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் அமிதாப் பச்சனின் பிறந்தநாளில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட பதிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது, அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மாமனார் அமிதாப் பிறந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் ஐஸ்வர்ய ராய் வெளியிட்ட புகைப்படங்களில் அமிதாப் மற்றும் ஆராத்யா மட்டுமே இருக்கும் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகளாக ஐஸ்வர்யா இதனை பின்பற்றி வருகிறார்.

ஐஸ்வர்யா ராய் கடைசியாக திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார், அதே நேரத்தில் ஜெயா பச்சன் கரண் ஜோஹரின் ராக்கி ராணி கி பிரேம் கஹானியில் நடித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aishwarya Rai Bachchan Amitabh Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment