Advertisment

சிம்புவுடன் அடுத்த படம்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிளான் இதுதானா?

பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா சமீபத்தில் ’முசாஃபிர்’ என்ற மியூசிக் வீடியோவை இயக்கினார்.

author-image
WebDesk
New Update
Aishwarya Rajinikanth

Aishwarya Rajinikanth ready for next film with Simbu?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ 18 வருடங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஜனவரி 17 அன்று அறிவித்தனர்.

Advertisment

இருவரும் தங்களை தனி நபர்களாக புரிந்து கொள்ள நேரம் எடுப்பதால் தனியுரிமை கோரினர். இருப்பினும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தெரிவித்தார்.

பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

publive-image

தனுஷ் தனது வரவிருக்கும் படமான மாறனின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி/சார், தி கிரே மேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களும் அவரிடம் உள்ளன.

அதே நேரம்’ ஐஸ்வர்யா சமீபத்தில் இந்தி-தமிழ் ரொமான்டிக் சிங்கிளான ’முசாஃபிர்’ என்ற மியூசிக் வீடியோவை இயக்கினார்.

இதற்கிடையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சோர்வாக உணர்ந்ததால் இப்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது அடுத்த இயக்கத்திற்கு தயாராகிவிட்டதாகவும், அவரது மூன்றாவது படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு தயாராக இருப்பதாகவும் இப்போது ஒரு புதிய சலசலப்பு உருவாகி உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம், நடிகர் சிம்புவை படத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் நடித்து வரும் சிம்பு, இதனை தொடர்ந்து ‘பத்து தலை’, ‘கொரோனா குமார்’ ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் படத்திற்கு ஒரு 'மாஸ்' ஹீரோவை விரும்புகிறார்கள் என்றும், மேலும் 'மாநாடு' மூலம் மீண்டும் வந்த சிம்பு அவர்களின் முதல் சாய்ஸ் என ஊகிக்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை.

ஏற்கெனவே 2003ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே பாடலை சிம்புவும், ஐஸ்வர்யாவும் இணைந்து பாடியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Simbu Aishwarya Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment