New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/Aishwarya-rajinikanth.jpg)
விவாகரத்து குறித்த அறிவிப்பிற்கு பிறகு தன்னை மற்ற விஷயங்களில் மிகவும் பிசியாக ஐஸ்வர்யா வைத்துக் கொண்டு வருகிறார். அவரது சண்டே உடற்பயிற்சி வீடியோ வைரலாகி வருகிறது.
அண்மையில் நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக சமூக வலைதளத்தில் இருவரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு சினிமா துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், விவாகரத்து குறித்த அறிவிப்புக்கு பிறகு தன்னை மற்ற விஷ்யங்களில் பிஸியாக ஐஸ்வர்யா வைத்துள்ளார். சமீபத்தில் இசை ஆல்பத்தை இயக்கி நான்கு மொழிகளில் வெளியிட்டார். அதேபோல், பாலிவுட்டில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
மகன்களுடன் சிறப்பான பொழுதை போக்க வேண்டியே படங்களை இயக்காமல் இருந்ததாக கூறிய ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் இயக்குநர் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
சோஷியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது கருத்துகளையும், உடற்பயிற்சி வீடியோவையும் அப்லோடு செய்து வருவார்.
அந்த வகையில், தன்னுடைய ஞாயிற்றுக்கிழமை எப்படி துவங்கும் என்பது குறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
This was pretty much my Sunday morning! #happysunday peeps..break a sweat 💪🏼💦bring on the smile..and bend a bit for that selfie😉🌸 pic.twitter.com/OffU1p0rNC
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) April 24, 2022
வீடியோவில், ஐஸ்வர்யா கடுமையான உடற்பயிற்சி செய்கிறார். புத்துணர்ச்சி பெற எனர்ஜி பானம் குடிக்கிறார். பின்னர், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார். இறுதியில், காப்பி குடிக்கிறார். இப்படி தான், ஞாயிற்றுக்கிழமை தொங்கும் என கேப்ஷன் பதிவிட்டு, அனைவருக்கும் ஹேப்பி சண்டே என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.