/tamil-ie/media/media_files/uploads/2017/11/ajith.jpg)
இத்தனை வருடங்களில் நடிகர் அஜித்தை, அவரது அர்ப்பணிப்பான நடிப்பை புகழ்ந்து பல பிரபலங்கள் வாழ்த்தியுள்ளனர்.
ஆனால் இங்கு ஒரு நடிகர் அஜித்திடம் அர்ப்பணிப்பே இல்லை எனக்கூறி அஜித் ரசிகர்களை அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளார்.
அவர் யாரும் அல்ல. சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திலும் பங்கெடுத்து வரும் நடிகர் பப்லு ப்ரித்விராஜ் தான். அவர் 3 மாதங்களுக்கு முன்பு அவர் கூறிய அந்த கமெண்டுகள் தற்போது மீண்டும் இணையத்தில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.
ஒரு நேர்க்காணலில், நடிகர் அஜித்தின் பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சைடுகள் பற்றி கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
”அஜித் ஒரு டவுன் டூ எர்த் மனிதர், மிகவும் கூலானவர்” என அவரின் பாஸிட்டிவைப் பற்றி கூறிய ப்ரித்விராஜ், “அவரின் அர்ப்பணிப்பு அளவு பூஜ்ஜியமாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் கொடுத்து வைத்தவர்” என்று நெகட்டிவாக கூறினார்.
இதனால், அஜித் கஷ்டப்படாமல் இத்தனை பெரிய உயரத்தை அடைந்து விட்டாரா என கோபமாகினர் அவரது ரசிகர்கள்.
மேலும் தொடர்ந்த ப்ரித்வி, “அஜித்துக்கு நடிப்பதை விட பிரியாணி செய்வதில் தான் விருப்பம் அதிகம்” என்றார்.
அஜித்துடன் இணைந்து ‘அவள் வருவாளா’ என்ற படத்தில் பப்லு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பப்லு ப்ரித்விராஜின் இந்த கமெண்டுகள் அஜித் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.