நான் நடிக்க வந்தது ஒரு விபத்து; சினிமாவில் நுழைய காரணம் இதுதான்: மனம் திறந்த அஜித்

அஜித் குமார், பைக் பந்தயத்தின் மீது தீராத காதல் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அந்த ஆர்வம்தான் அவரை நடிப்புத் துறைக்கு அழைத்து வந்தது என்பது ஆச்சரியமான உண்மை.

அஜித் குமார், பைக் பந்தயத்தின் மீது தீராத காதல் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அந்த ஆர்வம்தான் அவரை நடிப்புத் துறைக்கு அழைத்து வந்தது என்பது ஆச்சரியமான உண்மை.

author-image
WebDesk
New Update
Ajith Good Bad Ugly

தல அஜித் குமார்... இந்த பெயரைச் சொன்னாலே திரையரங்குகள் அதிரும். ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். ஆனால், இந்த மாஸ் ஹீரோவின் ஆரம்பம் பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான திருப்பம். அஜித் குமாருக்கு பைக் மற்றும் கார் பந்தயங்களின் மீது இருந்த அதீத காதல் பலரும் அறிந்த ஒன்று. ஆனால், அந்த காதல்தான் அவரை ஒரு நடிகனாக மாற்றியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Ajith Kumar took up acting only to pay back debts and fund passion for racing: ‘I was terrible’

சமீபத்திய ஒரு பேட்டியில் அஜித் தன்னைப் பற்றி கூறும்போது, "நான் ஒரு விபத்து நடிகன். எனக்கு ஆரம்பத்தில் நடிப்பில் எந்தவிதமான ஆர்வமும் கிடையாது" என்று வெளிப்படையாகப் பேசினார். நடிப்பின் மீது விருப்பம் இல்லாவிட்டாலும், தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலை அவரை சினிமா உலகிற்குள் தள்ளியது. பைக் பந்தயம் என்பது மிகவும் செலவு பிடிக்கும் ஒரு விளையாட்டு. அந்த செலவுகளைத் தொடர்ந்து சமாளிக்க முடியாத நிலையில், கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி திரைத்துறையில் நுழைந்து தனது பந்தயக் கனவுகளுக்கு நிதி திரட்ட முடிவு செய்தார் அஜித்.

இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில், "நடிப்பு என் எண்ணத்தில் இருந்ததே இல்லை. நான் ஒரு விபத்து நடிகன்" என்றார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு வாகன நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தனது 18 வயதில், பெற்றோர்களால் தனது பந்தய ஆர்வத்திற்கு நிதியுதவி செய்ய முடியவில்லை என்றும், காரணம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்தது என்றும் அவர் கூறினார். அதனால் தனது சொந்த வழியில் தனது ஆர்வத்திற்கு நிதி திரட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

Advertisment
Advertisements

அதிர்ஷ்டவசமாக, ஒரு மாடலிங் ஒருங்கிணைப்பாளர் அஜித்தை அணுகினார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாடலிங் செய்யத் தொடங்கினார். இதன் மூலம் கிடைத்த பணத்தை அவர் தனது பந்தயங்களுக்காக செலவிட்டார். "எனக்கு நிறைய மாடலிங் வாய்ப்புகள் வந்தன. அதில் நான் சம்பாதித்த பணத்தை பந்தயங்களுக்காக செலவு செய்தேன்" என்று அவர் கூறினார்.

திரைப்படப் பின்னணி இல்லாததால், சினிமா துறையின் செயல்பாடுகள் குறித்து அஜித் மிகவும் அறியாதவராக இருந்தார். அவரது வெளிப்படையான பேச்சு சில சமயங்களில் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து, ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், "நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன். ஒரு பத்திரிகையாளர் என்னிடம் ஏன் நடிக்க வந்தீர்கள் என்று கேட்டபோது, எனது தோல்வியடைந்த தொழிலின் காரணமாக எனக்கு நிறைய கடன்கள் இருந்தன என்றும், ஓரிரு படங்களில் நடித்து அந்தக் கடன்களை அடைக்கலாம் என்ற எண்ணத்தில் வந்தேன் என்றும் கூறினேன்.

அதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். 'பணத்துக்காகத்தான் வந்தீர்களா?' என்று அவர் கேட்டார். அதற்கு நான், 'எத்தனை பேர் கடனைத் திருப்பிக் கட்டும் எண்ணத்துடன் வருகிறார்கள்? ஒரு அறிமுகமில்லாத, இருண்ட பிரதேசத்திற்குள் நுழைய நான் ஒப்புக்கொண்டதை ஏன் பாராட்டக் கூடாது?' என்று பதிலளித்தேன். யாரோ என்னை சாதாரணமாக வந்து நடிக்கச் சொல்லவில்லை. அது ஒரு ஆடிஷன். அதில் நான் தேர்ச்சி பெற்றேன். அதுவும் எனக்குத் தெரியாத ஒரு மொழியில் ஒரு வாய்ப்புக்கு நான் தகுதியானவன் என்று நிரூபிக்க வேண்டியிருந்தது" என்றார்.

ஆரம்பத்தில் தான் ஒரு சிறந்த நடிகர் இல்லை என்பதை அஜித் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அதனால்தான் அவர் தொடர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். அதன் விளைவாக இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். "நான் புகழ் அல்லது பிரபலத்தை விரும்பியெல்லாம் சினிமாவுக்கு வரவில்லை. எனது கடன்களை அடைக்க பணம் தேவைப்பட்டது. எனது ஆரம்பகால படங்களைப் பார்த்தால், நான் ஒரு மோசமான நடிகர்" என்று அவர் கூறினார்.

ஆரம்பகாலத்தில் தனது ஆங்கில கலந்த தமிழ் உச்சரிப்பு அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது என்பதையும் நினைவுகூர்ந்த அஜித், "எனது முதல் சில படங்களில் எனக்கு மற்ற நடிகர்கள் டப்பிங் பேசினார்கள். எனது ஆங்கில உச்சரிப்புக்காக நான் விமர்சிக்கப்பட்டேன். இன்றும் கூட, மிமிக்ரி கலைஞர்கள் எனது ஆரம்பகால பேச்சைப் பின்பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், நான் அதில் கடுமையாக உழைத்தேன். எனது உச்சரிப்பு, எனது தமிழ் மற்றும் பல விஷயங்களில் நான் கவனம் செலுத்தினேன்" என்று கூறினார்.

சுய-ஒப்புக்கொண்ட ஒரு சுமாரான நடிகராக இருந்து இன்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் குமார் நீண்ட தூரம் பயணித்துள்ளார். இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இது அவரது திரைப்பயணத்தில் ஒரு பொன் மகுடம். அஜித்தின் சமீபத்திய வெளியீடான 'குட் பேட் அக்லி'  திரைப்படம் உலகளவில் இப்படம் 240 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Actor Ajith Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: