/indian-express-tamil/media/media_files/2025/08/15/akshara-haasan-recalls-auto-driving-in-bangalore-and-getting-scratches-tamil-news-2025-08-15-13-22-56.jpg)
அக்ஷரா ஹாசன் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றையும், அதனை தனது வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாது பற்றியும் அவர் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவில் ஜாம்பவான் நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். ரசிகர்களின் உலக நாயகனான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் ஸ்ருதி ஹாசன். மற்றொருவர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள அக்ஷரா ஹாசன்.
அக்கா ஸ்ருதி ஹாசன், ஏற்கனவே பாடகியாக பல தமிழ் படங்களில் பாடி தனது அறிமுகத்தை ரசிகர்களுக்கு வழங்கினார். இடையில் குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்தும் இருந்தார். ஆனால், கதையின் நாயகியாக அவர் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2011-ல் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம் என உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தார். இதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனி ரசிகர்களை உருவாக்கினார்.
இதேபோல் இந்தி படங்களிலும் நடித்து அங்கும் தனக்கான பெயரை சம்பாத்தித்தார். இந்த 3 மொழிகளிலும் நடித்து பிசியாக வலம் வந்த அவர், நேற்று வியாழக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் தமிழில் ட்ரெயின், தெலுங்கில் சாலார் பார்ட் 2: சௌரியங்க பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மறுபுறம் தங்கை அக்ஷரா ஹாசன், 2010 ஆம் ஆண்டு ராகுல் தோலாகியாவின் சொசைட்டி திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் நடிகையாக அறிமுகமாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவற்றை அவர் மறுத்து விட்டார். குறிப்பாக மணிரத்னத்தின் கடல் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து இருந்தார். பின்னர், அப்பா கமலின் வெளியிடப்படாத படமான சபாஷ் நாயுடுவில் பணியாற்றினார். இதில் அவரது சகோதரி ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இத்தகைய சூழலில் தான் அக்ஷரா ஹாசன், 2015 ஆம் ஆண்டில் வெளியான ஷமிதாப் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்து இருந்தார். பின்னர் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்தார். தொடர்ந்து விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திலும் அவர் நடித்து இருந்தார். இதன் பிறகு அவர் பேசிய படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில், அக்ஷரா ஹாசன் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றையும், அதனை தனது வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாது பற்றியும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அக்ஷரா ஹாசன் பேசுகையில், "சாரி, எனக்கு ஆட்டோ ஓட்ட தெரியும். அதனை என் தோழியிடம் சொன்னேன். அவர் என்னிடம் கற்றுக் கொடுக்க முடியுமா எனக் கேட்டார். நான் சரி என்றேன்.
அப்போது பெங்களூரில் இருந்தோம். அது மழை பெய்யக்கூடிய சீசன். நான் அவங்களிடம் திரும்பும் போதும் சொல்ல வேண்டும் என்று சொல்லி இருந்தேன். ஆனால் அவங்க அந்த மகிழ்ச்சியில் எதுவும் சொல்லவில்லை. சட்டென்று வண்டியை திருப்ப, அப்படியே ஆட்டோ கவிழ்ந்துவிட்டது. எனக்கு கால், கை முழுதும் காயம் ஏற்பட்டது. அடிபட்டது ஓகே. ஆனால் அப்பாவிடம் என்ன சொல்லப்போகிறேன் என்று திகைத்தேன். அப்பா காயத்தை பார்த்தபோது, சாரி பா மன்னிச்சுடுங்க எனக் கேட்டேன்." என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.