Advertisment
Presenting Partner
Desktop GIF

புஷ்பா 2 விவகாரம்: ஹைதராபாத் காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்

புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், அல்லு அர்ஜுனிடம் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Allu

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: As police try to piece together Pushpa 2 stampede timeline, Allu Arjun appears before cops

 

Advertisment
Advertisement

தெலங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் இன்று (டிச 24) ஆஜரானார்.

முன்னதாக, காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அல்லு அர்ஜுனுக்கு நேற்று (டிச 23) சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என அல்லு அர்ஜுன் தெரிவித்ததாக போலீசார் கூறியிருந்தனர்.

டிசம்பர் 4-ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் டிசம்பர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்த பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவரது ஒன்பது வயது மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Pushpa 2 The Rule Allu Arjun
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment