/indian-express-tamil/media/media_files/U0wi62feYrusOnic1lGt.jpg)
ஆல்யா மானஸாவின் பெற்றோர் அவருடன் இணைந்துள்ளனர்.
பெரிய திரையில் அஜித் குமார்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா என காதல் நட்சத்திரங்கள் திருமண வாழ்க்கையில் இணைந்து இன்றளவும் பலருக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.
இதேபோல் சின்னத்திரையிலும் சில ஜோடிகள் உள்ளன. அதில் முக்கியமானவர்கள் ஆல்யா மானஸா- சஞ்சீவ் ஜோடி. சின்னத்திரை கொடுத்த சந்திப்பின் மூலம் காதலில் விழுந்து பின்னர் திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள் இவர்கள்.
இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அண்மையில் இவர்கள் பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி கிரகப்பிரவேசமும் நடத்தி இருந்தார்கள். ஆல்யா மானஸாவின் காதலுக்கு அவர்கள் பெற்றோர் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆல்யா மானஸா சஞ்சீவை கரம் பிடித்துள்ளார். இதனால் ஆல்யா பெற்றோர் அவருடன் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் சஞ்சீவ் ஆல்யா மானஸாவின் பெற்றோருடன் பேசி அவர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.