Advertisment

சூரியாவின் வாடிவாசல் படத்தில் அமீர் மாற்றப்படுவாரா? ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்

சூரியா கதாநாயகனாக நடிக்கும் 'வாடிவாசல்' படத்தில் அமீர்  மாற்றப்படுவாரா என்று கேள்வி எழுந்த நிலையில், இயக்குனர் வெற்றி மாறன் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ameer Vetri Maaran

ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்

பருத்திவீரன் படம் தொடர்பாக தயாரிப்பாளர் - சூரியா - இயக்குனர் அமீர் இடையேயான பிரச்னை பேசப்பட்டுவரும் நிலையில், சூரியா கதாநாயகனாக நடிக்கும் 'வாடிவாசல்' படத்தில் அமீர்  மாற்றப்படுவாரா என்று கேள்வி எழுந்த நிலையில், இயக்குனர் வெற்றி மாறன் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Advertisment

எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி, இயக்குனர் வெற்றிமாறன்  ‘வாடிவாசல்’ என அதே பெயரில் நடிகர் சூரியாவை வைத்து படம் இயக்குவதாக அறிவித்து நீண்ட நாட்களாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 'வாடிவாசல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் அமீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தினார். 

இதனிடையே, 'பருத்திவீரன்' படத் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜாவுடன் அமீர் மோதலில் ஈடுபட்டதால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை ஏமாற்றுக்காரர் என்று கூறியது சர்ச்சையானது.

ஆனால், 'வாடிவாசல்' படத்தில் அமீர் மாற்றப்படுவாரா என்பது இன்னும் விடை காணாத கேள்வி.

இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தில் அமீர் கதாபாத்திரத்தை வலுவாக வளர்த்துள்ளார் என்றும் அவரது பாத்திரம் ஈடுசெய்ய முடியாத ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

தயாரிப்பாள ஞானவேல் ராஜாவின் பேச்சுக்கு அமீர் கண்டனம் தெரிவித்ததோடு, படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ஈடுபட்டதால் பிரச்சினையை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார். 

'பருத்திவீரன்' திரைப்படம் சூரியாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி நடிகராக அறிமுகமான படம். அதே நேரத்தில், இந்த படம் சுமூகமாக வெளிவர சூர்யா நிதி உதவி செய்தார். அதன்படி, அமீர் மற்றும் ஞானவேல்ராஜா சம்பந்தப்பட்ட சமீபத்திய சர்ச்சை சூர்யா மற்றும் கார்த்தியையும் சிக்க வைத்துள்ளது. எனவே, 'வாடிவாசலில் அமீர் சூர்யாவுடன் நடிப்பாரா என்று கேள்வி எழுந்தது.



இந்த நிலையில், வெற்றி மாறன் குழுவினர், 'வாடி வாசல்' தொடர்பாக அமீருடன் இயக்குனர் வெற்றிமாறன் நடத்திய விவாதத்தின் படத்தைப் பகிர்ந்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தில் அமீர் ஈடு இணையற்ற நடிகர் என்றும் வெற்றி மாறன் அணியினர் தெரிவித்துள்ளனர்.

வெற்றி மாறன் தற்போது 'விடுதலை பார்ட் 2' படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். 'விடுதலை பார்ட் 2' படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வெற்றி மாறன் 'விடுதலை 2' வெளியீட்டிற்குப் பிறகு 'வாடி வாசல்' பணிகளைத் தொடங்க உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ameer Sultan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment