/indian-express-tamil/media/media_files/oT0D5IOnhKEGoXoDWbeY.jpg)
இசையமைப்பாளர் அனிருத் இதுவரை பேட்ட, தர்பார் மற்றும் ஜெயிலர் ஆகிய மூன்று படங்களில் ரஜினியுடன் பணியாற்றியுள்ளார்
ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ள அனிருத் நடப்பு 2023-ம் ஆண்டில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர், அட்லி இயக்கத்தில்ஷாருக்கானின் ஜவான் என 2 மெகாஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த இரு படங்களுமே வசூலில் பெரிய சாதனை படைத்துள்ள நிலையில், அனிருத்தின் இசை பெரிதாக பேசப்பட்டது.
தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, மலையாள நடிகர் ப்ரித்விராஜூன் டைசன், டி.ஜே.ஞானவேல இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படம், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 171-வது படம் என வரிசையாக பெரிய படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.
இதில் லோகேஷ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனது மாமாவும் சூப்பர் ஸ்டார் நடிகருமான ரஜினிகாந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ள அனிருத் தொழில் வேறு உறவுமுறை வேறு என்றும், இரண்டையும் எவ்வாறு பிரித்து பார்க்கிறார் என்பதை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஃபிலிம் கம்பானியன் உடனான நேர்காணலின் போது பேசிய அனிருத்திடம், குடும்ப பந்தம் எப்போதாவது உங்களுக்கு தடையாக இருந்திருக்கிறதா என்று கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அனிருத், “தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை நாம் பிரிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஜெயிலரைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில், ஸ்கிரிப்ட் படி படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருந்தது.
இருப்பினும், தோராயமாக முழு படத்தையும் நாங்கள் பார்த்தபோது, ​​இன்னொரு பாடலுக்கு இடம் இருப்பதாக உணர்ந்தோம், அந்த பாடல் தான் ஹுக்கும் என்று மாறியது. அவர் ஒரு போலீஸ்காரராக நுழையும் போது ஃப்ளாஷ்பேக்கில் இதை வைக்கலாம். ஆனால் படத்தில்தற்போது வில்லனின் இடத்திற்கு ஹீரோ வரும்போதும் அதை வைக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்.
“பொதுவாக, அந்தக் காட்சியில் பின்னணி இசைக்குத்தான் செல்வார்கள் ஆனால் ஹூக்கும் என்ற வார்த்தையை பாடலாக மாற்றலாம் என்று முடிவு செய்து அதன்படி அந்த பாடலை இடம்பெற செய்தோம்.அந்த பாடலும் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருந்தது. சிவராஜ்குமார், மோகன்லால், ரஜினிகாந்த் ஆகியோர் தோன்றும் கிளைமாக்ஸ் காட்சியிலும் அந்த பாடலை வைத்தோம்.
எனவே, நாங்கள் நிச்சயமாக தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உறவுமுறைகளை பிரித்து பணியாற்றுகிறோம் என்பது புரியும். வெளிப்படையாக கூடுதல் அன்பு இருக்கிறது, ஆனால் முதல் நாள் முதல், காட்சியில் இருந்து படத்தின் நீளத்தை பொருட்படுத்தாமல் அவர்களைத் முக்கிய கேரக்டர்கள் மூவரையும் தனித்தனியாக வைத்திருக்க முயற்சித்தோம். இதில் யார் பெரியதாக தெரிந்தாலும் பரவாயில்லை; நாங்கள் எங்கள் வேலையை சரியாக செய்ய வேண்டும், ”என்று நினைத்ததாக கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய , அனிருத் முதல்முறையாக கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்தின் மூலம் ரஜினிகாந்த் படத்தில் பணியாற்றினார். அடுத்து ஏஆர் முருகதாஸின் தர்பார் (2020) படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றிய அனிருத் 3-வது முறையாக ஜெயிலர் படத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.