Advertisment

எனக்கு பிடிக்காத ரோஜா ஆல்பம்... இந்திய அளவில் ஹிட்டடித்தது: மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னத்தின் ரோஜா படத்தின் இறுதி ஒலிப்பதிவைக் கேட்டதும் மனம் உடைந்ததாக கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ar Rahman Roja

ரோஜா ஒலிப்பதிவைக் கேட்டதும் மனம் உடைந்ததாக ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார்

இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற ரோஜா படத்தின் பாடல்கள் மற்றும் ஒலிப்பதிவை முதலில் கேட்டு இதயம் நொறுங்கி போனதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும் ஆஸ்கார் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய இந்த படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்று தேசிய விருமை வென்றது. அதோடு மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருதை பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அனைத்து படத்திற்கும் ஏ.ஆர்,ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார். 1992-ம் ஆண்டு தொடங்கிய இவர்களின் கூட்டணி தற்போது பொன்னியின் செல்வன் படம் வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரோஜா படத்தின் பாடல்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் இந்த பாடல்கள் மற்றும் ஒலிப்பதிவை முதலில் கேட்டபோது இதயம் நொறுங்கி போனதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

ரோஜா படத்தின் பாடல்கள் தமிழிலும், ஹிந்தியிலும் பெரிய வெற்றி பெற்றன, ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் முதலில் இந்தஒலிப்பதிவைக் கேட்டபோது இது மோசமான தேர்வு என்று இதயம் நொறுங்கி போனதாக கூறியுள்ளார். சமீபத்திய நேர்காணலில், பேசிய ரஹ்மான் ரோஜா படத்தின் ஆல்பத்தை சில முறை மாஸ்டரிங் செய்ததற்காக கோபப்பட்டேன். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியதால் இறுதியில் "சமரசம்" சமரசம் செய்துகொண்டு வெளியிட்டதாக கூறியுள்ளார்.

எனக்கு நினைவிருக்கிறது, ஆரம்பத்தில், எனது ரோஜா ஒலிப்பதிவு மாஸ்டரிடமிருந்து வந்தபோது நான் மிகவும் மனம் உடைந்தேன். இது மிகவும் மோசமாக தேர்வு என்று எனக்கு தோன்றியது., பின்னர் இந்த ஆல்பம் 3-4 முறை திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி வருவதற்குள் இதை மாற்றியமைப்பது சாத்திமில்லாதது என்று கருதி சமரசம் செய்து கொண்டு வெளியிட்டோம் என்று கூறியுள்ளார்.

ரோஜா படம் வந்த காலகட்டத்தில், மக்கள் பயன்படுத்திய இசை அமைப்புகள் குறைந்த தரத்தில் இருந்தன, எனவே அவற்றைப் பூர்த்தி செய்ய ஒலியின் தரத்தில் சமரசம் செய்ய வேண்டியிருந்தது. “ரோஜா காலத்தில், பயன்படுத்தப்பட்ட இசை அமைப்புகள் குறைந்த தரத்தில் இருந்தன, மேலும் நாங்கள் ஒரு மோனோ-மேக்னடிக் டேப்பைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அதிக அதிர்வெண்களை மிகைப்படுத்தி நிறைய ஸ்பேசியலைசர்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

ஆனால் காலப்போக்கில் விஷயங்கள் மாறிவிட்டன, நாங்கள் இப்போது ஒலி தரத்தில் உலகளாவிய அணுகுமுறையை எடுத்துக்கொண்டு, எங்கள் பதிவுகளை ஒவ்வொரு அமைப்பிற்கும் நெருங்கிய அளவில் ஒலிக்கச் செய்கிறோம். ரோஜாவின் இசை தேசிய அளவில் வரவேற்பை பெறும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் இந்தியில் இசை வரவேற்பை பெற போகிறது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது ஹிந்தியிலும் பெரியதாக பேசப்பட்டது.

எனவே, அடுத்த படமான பம்பாய் படம் ஒரு சவாலாக இருந்தது. ஒலியியலில் நாம் குடியேறுவதற்கு இதுவும் ஒரு காரணம். ஹம்மா ஹம்மா அல்லது சாய்யா சாய்யா, அவை அனைத்தும் ஒரு வகையில் ஒலிப்பு, இதன் மூலம் பிராந்தியம் சார்ந்ததாக இல்லாமல் நாம் தப்பிக்கலாம்,” என்று கருதியதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

A R Rahman 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment