scorecardresearch

இந்தி வேண்டாம்… தமிழில் பேசுங்கள் : விருது விழாவில் மனைவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அன்பு கட்டளை

ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்றார். இதில் மேடையில் இந்தியில் பேச வேண்டாம் என்று தனது மனைவியிடம் கூறினார்

AR Rahman
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் விரு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியிடம் ஹிந்தியில் பேச வேண்டாம் தமிழில் பேசுங்கள் என்று கூறிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படம் தொடங்கி தற்போது வரை தனது பாடல்கள் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் விருது வாங்கிய முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

சமீப காலமாக தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் எந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் அங்கு தமிழிலிலேயே பேசி வருகிறார். மேலும் தன்னிடம் ஹிந்தியில் யாரேனும் பேசினால் கூட அவர்களை தமிழில் பேசுங்கள் என்று சொல்வதும், இல்லை என்றால் அவர்களை விட்டு விலகி செல்வதும் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தனது மனைவி சாய்ரா பானுவை மேடைக்கு அழைத்து சில வார்த்தைகள் பேசி விருதை தன்னுடன் ஏற்றுக்கொண்டார்.

தனக்கு நன்றி தெரிவிக்காததால் உணர்ச்சிவசப்பட்ட அவரது மனைவியிடம், என்னுடன் சேர விரும்புகிறாயா என்று கேட்டபோது உடனடியாக மேடையை நோக்கி நடந்தார். மேடையில் தனக்கு கொடுக்கப்பட்ட விருதை தன்னிடம் கொடுத்த ரஹ்மானை அவரது மனைவி கட்டிப்பிடித்தார். அப்போது அவரை சில வார்த்தைகள் பேச அழைக்கப்பட்டது. ஆனால் அவர் பேசத் தொடங்கும்போதே, “தயவுசெய்து இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள்” என்று தமிழில் சொன்னார்.

இதனால் அரங்கமே சிரித்த நிலையில், சாய்ரா அசௌகரியமாக இருந்தாலும் புன்னகைத்து, “மன்னிக்கவும், என்னால் தமிழில் சரளமாக பேச முடியாது. எனவே, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். அவரது குரல் (ஏ.ஆர்.ரஹ்மான்) எனக்கு மிகவும் பிடித்தது என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நான் அவர் குரலில் மயங்கிவிட்டேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

தொழில்துறைகளில் பணியாற்றியிருந்தாலும், பல மொழிகளில் இசையை உருவாக்கியிருந்தாலும், ரஹ்மான் தமிழ் மொழிக்காக எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியபோது, ரஹ்மான், தமிழ்த் தாய் வாழ்த்து அல்லது தமிழ்த் தேசியத்தின் வார்த்தையான “தமிழ்த் தெய்வம்” என்ற “தமிழனங்கு” படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ரஹ்மானும் சாய்ராவும் 1995 இல் திருமணம் செய்து கொண்டனர், மேலும் அவர்களது திருமணம் அவரது தாயாரால் ஏற்பாடு செய்யப்பட்டது. உண்மையைச் சொல்வதானால், மணப்பெண்ணைத் தேட எனக்கு நேரமில்லை. நான் இந்த படங்கள் மற்றும் ரங்கீலா அனைத்தையும் பம்பாயில் செய்து கொண்டிருந்தேன், அதனால் நான் அதில் மிகவும் பிஸியாக இருந்தேன். ஆனால், எனக்கு திருமணம் செய்துகொள்ள இதுவே சரியான நேரம் என்று எனக்குத் தெரியும். எனக்கு 29 வயது, நான் என் அம்மாவிடம் மணப்பெண் தேடும் வேலையை தொடங்க சொன்னேன் என ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ar rahman tells wife not to speak in hindi at awards ceremony