/tamil-ie/media/media_files/uploads/2022/07/leena-manimekalai-saraswathi.jpg)
‘காளி’ படத்தின் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கவிஞர், திரைபட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்த விகாரத்தில் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் அதிரடி சரஸ்வதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில், கவிஞர் லீனா மணிமேகலை ‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதில், காளி வேஷத்தில் இருக்கும் பெண் சிகரெட் புகைப்பதை போல போஸ் கொடுத்தபடி இருக்கிறார். காளி வேஷத்தில் உள்ள பெண் வாயில் சிகரெட் வைத்திருக்கிற போஸ்டர் இந்து மத உணர்வை புண்படுத்தியதாக சமூக ஊடகங்களில் சர்ச்சையானது. மேலும், லீனா மணிமேகலைக்கு எதிராக காவல்துறையில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய ‘காளி’ ஆவணப்படக் காட்சிகளை நீக்காவிட்டால், ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் அதிரடி சரஸ்வதி மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் சரஸ்வதி மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.