பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த படம் நெட்டிசன்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தனது பிறந்த நாளை நவம்பர் 5 ஆம் தேதி கொண்டாடினார். அதியா ஷெட்டி தன்னுடைய பிறந்தநாளுக்கு நண்பர்கள் குடும்பத்தினர் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்துகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படம் நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்துள்ளது. அது என்ன புகைப்படம் என்றால், நடிகை அதியா ஷெட்டியும் கிரிக்கெட் வீரர்க் கே.எல்.ராகுலும் உள்ள படம்தான் அது.
அதே போல, கே.எல்.ராகுல் அவரும் அதியாவும் உள்ள ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். கே.எல்.ராகுலும் அதியாவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை. இந்த புகைப்படம் இருவருக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.
அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் ஹேங் அவுட்டில் உள்ளனர். அதியாவின் தோழி ஆகான்ஷா ரஞ்சன் கபூர் அதியா - ராகுல் மற்றும் அவரும் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஒரு பாலிவுட் நடிகையுடன் இணைந்திருப்பது இது முதல் முறை அல்ல. அவர் சோனல் சவுகானுடன் டேட்டிங் செய்ததாக வதந்திகள் வந்தன. பின்னர், அவர் நித்தி அகர்வாலுடன் சேர்த்து பேசப்பட்டார். இருப்பினும், வூட் ஷோவில் தெலுங்கு நடிகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க நித்தி இருவரும் வெறும் நண்பர்கள் என்று கூறினார்.
சினிமாவில் அதியா ஷெட்டி நடித்துள்ள மோதிச்சூர் சக்னாச்சூர் படம் வெளியாகி உள்ளது. காதலை மையமாகக்கொண்ட இந்தப் படத்தில் அதியா ஷெட்டி நவசுத்தின் சித்திக் உடன் சேர்ந்து நடித்துள்ளார்.
இந்த படத்தில் 36 வயதான வேலையில்லாத புஷ்பேந்தர் என்பவர் (நவாசுதீன்) மனைவியை தேடுகிறார். அதே போல, அன்னி என்ற பாத்திரத்தில் நடித்துள்ள அதியா ஷெட்டி கணவனைத் தேடுகிறார். ஆனால், அவர் வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் இதுதான் கதை.
மோதிச்சூர் சக்னாச்சூர் படத்தில் நடித்தது பற்றி அதியா ஷெட்டி கூறுகையில், “நான் இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதம் சொல்வதற்கு முன்பு, முடியாது என்று சொன்னேன். ஏனென்றால் இந்த பாத்திரம் நான் இதற்கு முன்பு செய்ததைவிட வித்தியாசமானது என்பதால் என்னால் அதை செய்ய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், அது உற்சாகமாக இருந்தது.” என்று கூறினார்.