Advertisment

ஷாருக்கான் விஜய்க்கு கொடுத்த வாக்குறுதி... ஜவான் உறுதியான பின் நடந்தது என்ன? மனம் திறந்த அட்லீ

ஜவான் படம் உறுதியான பிறகு முதல் வேளையாக ஷாருக்கான் விஜயிடம் பேசி வாக்குறுதி கொடுத்தார் என்று இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
New Update
Atlee Shah Rukh Khan Vijay

விஜய் - அட்லீ - ஷாருக்கான்

ஆங்கிலத்தில் படிக்க : Atlee reveals what Shah Rukh Khan promised Vijay after confirming Jawan

Advertisment

ஜவான் படத்தின் மூலம் இந்தியாவில் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ள அட்லீ இந்த படம் உறுதியான பிறகு ஷாருக்கான் விஜய்க்கு கொடுத்த வாக்குறுதி குறித்தும், படம் முடியும் வரை விஜய் தனக்கு எவ்வாறு ஆதரவாக இருந்தார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தெறி, மெர்சல், பிகில் என விஜய் நடிப்பில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ அடுத்து ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கிய இந்த படம், 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் வெளியானது. வழக்கம்போல் அட்லீ காப்பி என்று சில விமர்சனங்கள் எழுத்தாலும், ஜவான் படம் உலகளவில் 1100 கோடிக்கு மேல் வசூலித்து ஷாருக்கானுக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் மூலம், நயன்தாரா, அனிருத் ஆகிய இருவரும் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர். இந்த வெற்றி கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் அட்லீ, ​​டிவி தொகுப்பாளர் கோபிநாத்-க்கு அளித்த பேட்டியில், ஜவான் படம் உறுதியானது என்பதை முதலில் அறிந்தவர் விஜய் தான், ஷாருக்கான் நடிக்கராக தனக்கும், இயக்குனராக உங்களுக்கும் ஜவான் படம் வெற்றியை கொடுக்க வேண்டும் என்று விரும்பியதாக அட்லீ தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் ஜவான் படம் உறுதியான பிறகு பேசியது குறித்து தெரிவித்த அட்லீ,ஜவான் படம் எனக்கும் உங்களுக்கும் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். 'நீங்கள் வெற்றிகரமான இடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களைப் போல் உங்களை விட உயர்ந்த இடத்தில் இருந்து இங்கு வந்த பலர் தோற்றுப் போனார்கள். அது போன்று நடக்கக்கூடாது. இது பணத்தைப் பற்றியது அல்ல, பெயரைப் பற்றியது. நீங்கள் தோற்றால் நானும் தோல்வியை சந்திப்பேன் என்று சொன்ன ஷாருக்கான், விஜயிடம் பேச வேண்டும் என்று கூறி அவரை தொலைபேசியில்  அழைக்கச் சொன்னார், ”என்று அட்லீ கூறினார்.

ஜவான் பற்றி விஜய்யிடம் சொல்ல ஷாருக் விரும்பினார். அதன்பிறகு் நான் விஜய் அண்ணாவுக்கு போன் செய்து, எஸ்.ஆர்.கே உங்களிடம் பேச விரும்புவதாகச் சொன்னேன், அவர் யான் டா’ (ஏன் டா?)  என்பது போல கேட்டார். அதன்பிறகு, அவர் பேசும்போது ஷாருக்கான்,  எனக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்வதாக விஜய் சாரிடம் சொன்னார். மேலும் இந்த படத்தின் மூலம் நான் நாட்டின் மிகப்பெரிய இயக்குனராக மாறுவேன் என்று ஷாருக்கான் சொன்னதை கேட்டதும் விஜய் சார் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஜவான் படப்பிடிப்பின் போது அதை ஒழுங்கா முடிச்சிட்டு பொறுமையா இருக்கணும்னு சொன்னார். இந்த பயணம் முழுவதும் அவர் தொடர்ந்து ஆதரவாக இருந்தார், ”என்று அட்லீ கூறியுள்ளார்.

தற்போது விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் இணைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இரு ஹீரோக்களும் இதற்கு அனுமதி அளித்ததை அட்லீ உறுதி செய்தார். இது தனது அடுத்த திட்டமாக இருக்கலாம் என்று அட்லீ சூசகமாக கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Atlee Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment