Azhagu Serial: சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியல் தற்போது விறுவிறுப்பைக் கிளப்பியுள்ளது.
Advertisment
திருநாவுக்கு திருமணம். அவனின் காதலி நிவி இறந்து விட்டாள் என்றிருக்க, அவளோ மாமாவிடம் சிக்கித் தவிக்கிறாள். பின்னர் திருநாவுக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்துக்கு முதல் நாள் இரவு மண்டபத்தை அடைகிறாள் நிவி. தன் மாமாவால் தான் அனுபவித்த கொடுமைகளை பற்றிக் கூறுகிறாள். அவளைப் பார்த்த திருநா, தனக்கு நிவி தான் வேண்டும் என்கிறான்.
தன்னால் திருநாவுக்கும், அவனது குடும்பத்துக்கும் எந்த பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது என்றெண்ணும் நிவி, கடிதம் எழுதி வைத்து விட்டு மண்டபத்தை விட்டு வெளியேறுகிறாள். முகூர்த்த நாளின் காலையில், திருநா காணாமல் போயிருக்கும் விஷயம் தெரிய வந்து அர்ச்சனா குடும்பத்தினர் அதிர்ந்து போகிறார்கள். நிவியை தேடி அவன் போயிருப்பானோ என்ற நோக்கில் திருநா குடும்பம் சந்தேகிக்கிறது.
Advertisment
Advertisements
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...
அர்ச்சனாவை விட்டு விட்டு, திருநா அவன் காதலி நிவியை கரம் பிடிக்க சென்று விட்டதாக, பூர்ணா அனைவர் முன்பும் கூறுகிறாள். அப்போது தான் திருநா - நிவி பற்றிய விஷயங்கள் அர்ச்சனா வீட்டுக்கு தெரிய வருகிறது. ஆனால், இந்த விஷயம் தனக்கு முன்பே தெரியும் என அர்ச்சனா கூறுகிறாள். திருநா வருவானா, இந்தக் கல்யாணம் நடக்குமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அர்ச்சனா வீட்டார்.
திருநாவை பூர்ணா தான் கடத்தியிக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறாள் சுதா. அதற்காக போலீஸின் உதவியுடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறாள். திருநா மீண்டு வந்து யாரை திருமணம் செய்துக் கொள்வான்? பூர்ணாவின் முகத்திரை அனைவர் முன்பும் கிழியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.