பாக்கியலட்சுமி சீரியலில், பேரன் பேத்தி எடுத்த கோபி, கர்ப்பமாக இருக்கும் தனது 2-வது மனைவி ராதிகாவிடம், ‘அபார்ஷன்’ பண்ணிடலாமானு கேட்டதால் கோபமடைந்த ராதிகா தர்மஅடி அடிக்கும் இந்த வார புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று டி.ஆர்.பி-யில் கலக்கி வருகிறது. அதற்கு காரணம், பாக்கியலட்சுமி அமைதியான நடிப்பு, கோபியின் திருட்டுத் தனம், ராதிகாவின் ஆதிக்கம் என்று கதையின்போக்கை குறிப்பிட்டு சொல்லலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகி நடுத்தர வயதில் இருக்கும் பாக்கியலட்சமி குடும்பமே உலகம் என்று இருக்கிறாள். பாக்யாவுக்கு திருமணமான 2 மகன்கள், 1 மகள் இருக்கிறார்கள். பாக்யாவின் கணவர் கோபி, பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த பாக்யாவை அவளுக்கே தெரியாமல் விவாகரத்து செய்துவிட்டு, கல்லூரி படிக்கும்போது காதலித்த ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறார். ராதிகாவும் முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்றவர். முதல் திருமணத்தில் ஒரு மகள் இருக்கிறாள். அதே நேரத்தில், பாக்யாவின் தோழிதான் இந்த ராதிகா. பாக்கியலட்சுமி சீரியலில், கோபி 2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். இருந்தாலும் கோபி - பாக்யா தம்பதியின் மூத்த மகன் செழியனுக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள்.
இப்படி, பேரன் பேத்தி எடுத்துவிட்ட வயதில் கோபி 2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பது நகைச்சுவையாகி உள்ளது. இந்நிலையில், கோபியின் 2-வது மனைவி ராதிகா கர்ப்பம் அடைந்துள்ளார். ராதிகா கர்ப்பமாக இருப்பதை டாக்டரும் பரிசோதனையில் உறுதி செய்கிறார். ராதிகா கர்ப்பமாக இருப்பதை அறிந்து முதலில் சந்தோஷப்படும் கோபி, பேரன் பேத்தி எடுத்த வயதில், 2-வது மனைவி ராதிகா கர்ப்பமானால் எல்லாரும் கிண்டல் செய்வார்கள் என்று நினைத்து கோபி குழப்பமடைகிறான்.
இந்நிலையில், கோபி, கர்ப்பமாக இருக்கும் தனது 2-வது மனைவி ராதிகாவிடம், ‘அபார்ஷன்’ பண்ணிடலாமானு கேட்டடால் கோபமடைந்த ராதிகா தர்மஅடி அடிக்கும் இந்த வார புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வர புரோமோ வீடியோவில், கோபி தயங்கித் தயங்கி ராதிகாவிடம் “பேபி அபார்ஷன் பண்ணிடலாமா” என்று கேட்கிறார். இதைக் கேட்டு கோபமடையும் ராதிகா “என்னது” என்று கேட்க ஒன்றுமில்லை என்று கூறி கோபி சமாளிக்கிறான்.
இதையடுத்து, ராதிகா, கோபியிடம் “பாக்யா முதலில் கர்ப்பமாக இருக்கும்போது தெரிந்ததும் உங்களுக்கு எப்படி இருந்தது” என்று கேட்கிறாள். அதற்கு, கோபி “ஆஹா ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்று கூறுகிறான். இதைக் கேட்டு கோபமடையும் ராதிகா, “பாக்யா கர்ப்பமாக இருந்த உங்களுக்கு சந்தோஷமா இருக்கும், நான் கர்ப்பமாக இருந்தால் அபார்ஷன் பண்ணிடலாமானு கேட்பீங்களா?” என்று கேட்டு தலையணையை எடுத்து கோபியை தர்ம அடி அடிக்கிறார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்பத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோபி, ராதிகா-விடம் தர்ம அடி வாங்கும் இந்த வார பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. என்ன கோபி, உன் கதை, வடிவேலு, கோவை சரளா காமெடி கதையா ஆகிப்போச்சே என்று நெட்டிசன்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.