Advertisment

அம்மாவை கூட்டிப் போகச் சொன்ன கோபி... முடியாது பாஸ் என மறுத்த பாக்யா; பாவம் ஈஸ்வரி!

ராதிகாவின் அம்மாவுடன் ஈஸ்வரி மல்லு கட்டி வரும் நிலையில், பாக்யாவை சந்தித்த கோபி, அம்மாவை கூட்டிப் போயிரு என்று கெஞ்சுகிறார். ஆனால், பாக்யா முடியாது பாஸ் என்று மறுக்கும் புரோமோ சீரியல் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Gopi Bakya

பாக்யாவை சந்தித்த கோபி, அம்மாவை கூட்டிப் போயிரு என்று கெஞ்சுகிறார். ஆனால், பாக்யா முடியாது பாஸ் என்று மறுக்கும் இந்த வாரம் எபிசோடுக்கான புரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், தாய்ப்பாசத்தில், மருமகள் பாக்யாவைக் கைவிட்ட மகன் கோபிக்கு ஆதரவாக, கோபியின் அம்மா ஈஸ்வரி, ராதிகாவின் அம்மாவுடன் மல்லு கட்டி வரும் நிலையில், பாக்யாவை சந்தித்த கோபி, அம்மாவை கூட்டிப் போயிரு என்று கெஞ்சுகிறார். ஆனால், பாக்யா முடியாது பாஸ் என்று மறுக்கும் இந்த வாரம் எபிசோடுக்கான புரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை, அனைவரையும் கவர்ந்து விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

குடும்பமே உலகமாக இருக்கும் பாக்யலட்சுமி என்கிற பாக்யா. திருமணமான 2 மகன்கள், கல்லூரி படிக்கும் ஒரு மகள். மாமனார், மாமியார். கணவன் கோபியோ முழு சுயநலவாதி. கோபி கல்லூரிக் காலத்தில் காதலித்த ராதிகா, விவாகரத்து பெற்று மகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில்,  அவளை 2வது திருமணம் செய்துகொள்கிறான். பாக்யாவுக்கு விவாகரத்து கொடுத்துவிடுகிறான். 

பாக்யா தனக்கு தெரிந்த சமையல் கலையின் மூலம், கேட்டரிங், ஹோட்டல் ஆரம்பித்து குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறார். கோபியிடம் பணம் கொடுத்து வீட்டை எழுதி வாங்கிக் கொள்கிறார். ஆனால், கோபி, தனது அம்மா ஈஸ்வரியின் தாய்ப்பாசத்தைப் பயன்படுத்திகொண்டு, ராதிகாவுடன் வந்து பாக்ய வீட்டில் தங்குகிறான். இந்த சூழ்நிலையில், 2வது மனைவி ராதிகா கர்ப்பமாகிறாள். தாத்தாவாகிவிட்ட வயதில் மீண்டும் அப்பாவாகப் போகிறாரா கோபி, என்று மகன்கள், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கோபியை வீட்டை விட்டு அனுப்புகிறார்கள். அந்த நேரத்தில் கோபி, பாக்யா மற்றும் மகன்களை பழிவாங்க வேண்டும் என்று தனது அம்மாவை உடன் அழைத்து செல்கிறார். தாய்ப்பாசத்தில் ஈஸ்வரியும் மகன் உடன் ராதிகா வீட்டுக்குச் செல்கிறார்.

இரண்டாவது மருமகள் ராதிகா வீட்டுக்கு மகன் கோபியுடன் சென்ற ஈஸ்வரி, அங்கே ராதிகாவின் அம்மா கமலாவுடன் சண்டை போடுகிறார். வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஒருவருக்கொருவர் ஈஸ்வரியும் கமலாவும் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். ஆனால், இதில் மாட்டிக்கொண்டு முழிப்பது என்னவோ கோபிதான். ஒரு கட்டத்தில், கோபியின் அம்மா ஈஸ்வரி, ராதிகாவின் அம்மா கமலாவின் சண்டை எல்லை மீறி போகிறது. கோபி என்ன செய்வது என்று தெரியாமல் தலையைப் பிச்சிக் கொள்கிறான்.

இந்நிலையில்தான், பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 3 முதல் 8-ம் தேதி வரை எபிசோடுகளுக்கான புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புரோமோவில், பூங்காவில் பாக்கியலட்சுமி வாக்கிங் போய்க்கொண்டிருக்கிறார். அப்போது, அங்கே வாக்கிங் வரும் கோபி, பாக்யா அருகே வந்து, “பாக்யா, அங்கே வீட்ல அம்மாவுக்கு பாக்யாவோட அம்மாவுக்கு ஒரே சண்டை, நல்ல சாப்பாடு இல்லை. நீ கூப்பிட்டா அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்க, நீ அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிரு” என்று கேட்கிறான். இதற்கு பாக்யா, “முடியாது பாஸ்” என்று மறுப்பு தெரிவிக்கிறாள். இதைக் கேட்டு கோபி அறண்டு போகிறான்.

இதையடுத்து, பாக்யா மனது தாங்காமல், கோயிலுக்கு சென்று, அங்கே வந்திருக்கும் தனது மாமியாரான கோபியின் அம்மா ஈஸ்வரிவுக்கு கேரியரில் கொண்டுவந்த சாப்பாடு தருகிறார். ஆனால், ஈஸ்வரி வேண்டாம் என்று மறுக்கிறார். இதற்கு பாக்யா, அப்படியென்றால் நான் இங்கேயே வைத்துவிட்டு போகிறேன் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். கோயிலை சுற்றிவிட்டு வந்து பார்க்கும்போது, ஈஸ்வரி, ஆஹா என்ன சாப்பாடு, நல்லா சாப்பிட்டு எத்தனை நாளாச்சு என்று ருசித்து சாப்பிடுகிறார். இதைப் பார்த்த பாக்யா தனது மாமியார் எப்படி இருந்தார் இப்படி ஆகிவிட்டாரே என்று கண்கலங்குகிறார். 

பிறகு, தனது மாமியார் ஈஸ்வரியிடம், அத்தை நீங்கள் நம்ம வீட்டுக்கே வந்துடுங்க என்று கூப்பிடுகிறாள். அதற்கு ஈஸ்வரி, நான் வரமாட்டேன், நான் வந்துட்டா, கோபி வருத்தப்படுவான் என்று கூறுகிறார். பாவம் ஈஸ்வரி தாய்ப்பாசத்தில், மகன் கோபியின் உண்மை முகம் தெரியாமல் கண்மூடித் தனமாக இருக்கிறார். மகள் போல கவனித்துக்கொள்ளும் பாக்யாவை, ஈஸ்வரி இன்னும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்.

இந்த வார பாக்கியலட்சுமி சீரியல் புரோமோ வீடியோவில், ராதிகாவின் அம்மாவுடன் ஈஸ்வரி மல்லு கட்டி வரும் நிலையில், பாக்யாவை சந்தித்த கோபி, அம்மாவை கூட்டிப் போயிரு என்று கெஞ்சுகிறார். ஆனால், பாக்யா முடியாது பாஸ் என்று மறுக்கும் புரோமோ சீரியல் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment