Vijay TV Serial: கோபிக்கு ரூ.40 லட்சம் தர சம்மதித்த பாக்யா; முடிஞ்சது பஞ்சாயத்து?

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கோபி, பாக்யா எடுத்து வந்த பெட்டியை தூங்கி எறிந்து வீட்டை விட்டு வெளியேறு என்று சொல்லிவிட்டார்.

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கோபி, பாக்யா எடுத்து வந்த பெட்டியை தூங்கி எறிந்து வீட்டை விட்டு வெளியேறு என்று சொல்லிவிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீண்டும் பாக்யாவிடம் மாட்டிக்கிட்டீங்களே கோபி... எதிர்பார்பில் அடுத்த வார ப்ரமோ

கோபி பாக்யா இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், பாக்யா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று பார்த்தால், தற்போது கோபியை வெளியேற்ற பாக்யா முடிவு செய்து விட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோபியின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட பாக்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதனிடையே கோபி பாக்யா விவாகாரத்து கேஸ் கோர்ட்டுக்கு வந்த நிலையில், தைரியமாக கோர்டுக்கு வந்த பாக்யா கோபியை விவாகரத்து செய்வதாக கூறியதை தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து முடிந்துவிட்டது அதனைத் தொடர்ந்து பாக்யாவை திட்டிவிட்டு நேராக ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி விஷயத்தை சொல்லிவிட்டார்.

அதன்பிறகு வீட்டுக்கு வந்த கோபி விவாகரத்து பற்றி தனது குடும்பத்தாரிடம் சொல்லி, இனிமேல் பாக்யாவுக்கு இந்த வீட்டில் இடமில்லை என்று சொல்லிவிடுகிறார். அப்போது பாக்யா வீட்டுக்கு வருகிறார் அவளிடம் குடும்பத்தினர் அனைவரும் கோபி நல்லவர் போலவும். பாக்யா தப்பு செய்தது போலவும் பேசுகின்றனர்.

Advertisment
Advertisements

இத்தனை பேச்சுக்கும் பாக்யா அமைதியாகவே நிற்கிறார். ஆனால் குடும்பத்தில் பாக்யாவின் மாமனாரை தவிர மற்ற அனைவரும் பாக்யா செய்தது தான் தவறு என்பது போல அவளை குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு எழில் பதிலடி கொடுத்தாலும் அவன் சொல்வதை வீட்டில் யாரும் கேட்பதாக இல்லை.

இதனிடையே நேற்றைய எபிசோட்டில், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கோபி, பாக்யா எடுத்து வந்த பெட்டியை தூங்கி எறிந்து வீட்டை விட்டு வெளியேறு என்று சொல்லிவிட்டார். ஆனால் அவருக்கே அதிர்ச்சி தரும் விஷயமாக, பாக்யா எடுத்து வந்த பெட்டியில் கோபி ட்ரெஸ் இருக்கிறது. இதனால் அதிர்ச்சியாகும் கோபி நான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டுமா என்று கேட்கிறார்.

அதன்பிறகு தொடரும் வாக்குவாதத்தினால், கோபி வீட்டை விட்டு வெளியே போகிறேன். ஆனால் இந்த வீட்டுக்காக 40 லட்சம் பணம் எனக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் ஷாக் ஆக அந்த 40 லட்சம் பணத்தை நானே தருகிறேன் என்று பாக்யா சொல்லிவிடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bakiyalakshmi Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: