Advertisment

Vijay TV Serial: பாக்யா சூட்கேஸை தூக்கி வீசிய கோபி; ட்விஸ்ட் அங்கேதான்!

கோபியை பாக்யா வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவாரா, கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: பாக்யா சூட்கேஸை தூக்கி வீசிய கோபி; ட்விஸ்ட் அங்கேதான்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோட்டில் கோபிக்கு பாக்யா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோபியின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட பாக்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதனிடையே கோபி பாக்யா விவாகாரத்து கேஸ் கோர்ட்டுக்கு வந்த நிலையில், தைரியமாக கோர்டுக்கு வந்த பாக்யா கோபியை விவாகரத்து செய்வதாக கூறியதை தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து முடிந்துவிட்டது அதனைத் தொடர்ந்து பாக்யாவை திட்டிவிட்டு நேராக ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி விஷயத்தை சொல்லிவிட்டார்.

அதன்பிறகு வீட்டுக்கு வந்த கோபி விவாகரத்து பற்றி தனது குடும்பத்தாரிடம் சொல்லி, இனிமேல் பாக்யாவுக்கு இந்த வீட்டில் இடமில்லை என்று சொல்லிவிடுகிறார். அப்போது பாக்யா வீட்டுக்கு வருகிறார் அவளிடம் குடும்பத்தினர் அனைவரும் கோபி நல்லவர் போலவும். பாக்யா தப்பு செய்தது போலவும் பேசுகின்றனர்.

இத்தனை பேச்சுக்கும் பாக்யா அமைதியாகவே நிற்கிறார். ஆனால் குடும்பத்தில் பாக்யாவின் மாமனாரை தவிர மற்ற அனைவரும் பாக்யா செய்தது தான் தவறு என்பது போல அவளை குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு எழில் பதிலடி கொடுத்தாலும் அவன் சொல்வதை வீட்டில் யாரும் கேட்பதாக இல்லை.

இதனிடையே இன்று வெளியாகியுள்ள ப்ரமோவில், என்னதான் கோபி, வெளியில் போ என்று பாக்யாவை சொன்னாலும் அவர் அது பற்றி எதுவும் பேசாத நிலையில், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கோபி, பாக்யா எடுத்து வந்த பெட்டியை தூக்கி வெளியில் வீசிவிடுகிறார். அதனைத் தொடர்ந்து உனக்கு இந்த வீட்டில் இடமில்லை என்று அதிகாரமாக சொல்ல, வீட்டில் உள்ள அனைவரும் கோபியை அதிர்ச்சியாக பார்க்கின்றனர். இதனிடையே கோபி வெளியில் வீசிய பெட்டியில் பாக்யா துணி இல்லாமல் அவர் துணி இருப்பதால், கோபியும் ஷாக் ஆகிறார்.

அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் அடுத்து என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கோபியை பாக்யா வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவாரா, கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment