Advertisment

பாக்யலட்சுமி சீரியல் அதிரடி திருப்பம்: ராதிகாவுக்கும் குடும்பத்தில் 'பங்கு' கொடுத்த பாக்யா!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில், கோபியின் முதல் மனைவி பாக்யா, இரண்டாவது மனைவி ராதிகாவுக்கு குடும்பத்தில் பங்கு கொடுக்கும் விதமான புரோமோ வெளியாகி சீரியலில் ஒரு அதிரடியான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi serial promo

பாக்யலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Baakiyalakshmi Serial Promo: விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில், கோபியின் முதல் மனைவி பாக்யா, இரண்டாவது மனைவி ராதிகாவுக்கும் குடும்பத்தில் பங்கு கொடுக்கும் விதமான புரோமோ வெளியாகி சீரியலில் ஒரு அதிரடியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

Advertisment

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மாறாத ஒரே விஷயம் என்றால் அது சீரியல்கள்தான். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சீரியல் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும். அப்படி ஒரு சீரியல்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல்.

பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பமே உலகமாக இருக்கும் பாக்கியலட்சுமி. அவருடைய கணவன் கோபி எப்போதும் பாக்யாவை படிக்காதவள், ஒன்றும் தெரியாதவள் என்று மட்டம் தட்டுவான். 2 வளர்ந்த பிள்ளைகள், ஒரு மகள் இருந்தபோதும், பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, கோபி கல்லூரி படித்த காலத்தில் காதலித்த, ராதிகாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அதோடு முதல் மனைவி பாக்யா மற்றும் இரண்டாவது மனைவி ராதிகாவோடு ஒரே வீட்டில் வசிக்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான், பாக்கியலட்சுமி வீட்டில் ஒரு புயல் வீசத் தொடங்கிவிட்டது. கோபி - பாக்கியலட்சுமி தம்பதியரின் மூத்த மகன் செழியன் ஜெனியை காதல் திருமணம் செய்து ஒரு மகள் பிறந்திருக்கிறாள். இந்த நேரத்தில் மாலினி என்ற பெண் உடன் அவனுக்கு தவறான உறவு ஏற்படுகிறது. செழியன் மீது ஆசைப்படும் மாலினி அவனை மிரட்டுகிறாள். இவர்களின் உறவு செழியன் வீட்டுக்கும், ஜெனிக்கும் தெரிய வர ஒரு பூகம்பமே வெடிக்கிறது. காதல் கணவன் தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த ஜெனி கோபமும் அழுகையுமாக அவளுடைய அம்மா வீட்டுக்கு குழந்தையுடன் செல்கிறாள். 

ஜெனியையும் குழந்தையையும் பிரிந்த செழியன் தான் செய்த செயலை எண்ணி குற்றவுணர்வுடன் வருத்தப்படுகிறான். ஆனால், ஜெனியிடம் பேச முடியவில்லை. இதற்கிடையில், செழியனின் பாட்டி ஈஸ்வரி செழியனுக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்க பெண் பார்க்கிறார். ஆனால், செழியன் தனக்கு இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ள விருப்பமில்லை. வாழ்ந்தால் அது ஜெனியுடன் மட்டும்தான் என்று உறுதியாகக் கூறிவிடுகிறான். 

இதையடுத்து, பாக்யா, ஜெனியின் அம்மாவுடன் பேசி, அவருடைய தோழியின் வீட்டில், ஜெனியையும் செழியனையும் சந்தித்துப் பேச வைக்கிறார். ஜெனி சண்டைப் போட்டு, பேசித் தீர்த்து சமாதானம் ஆகிறாள். ஜெனியும் செழியனும் ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் இருவரையும் பாக்யா வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். அப்போது, பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி, செழியனும் ஜெனியும் ஒன்று சேர்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான், உங்கள் அத்தை செழியனுக்கு பெண் பார்த்தபோது ஒப்புக்கொண்டேன் என்று கூறுகிறார். மருமகள் பாக்யாவின் சாமர்த்தியத்தை மாமனார் ராமமூர்த்தி புகழ்ந்துகொண்டிருக்கும்போது குறுக்கிடும் மாமியார், அதெல்லாம் இல்லை, இப்படி இரண்டாவது கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தால்தான் வழிக்கு வருவார்கள் என்று நான் போட்ட திட்டம்தான் காரணம் என்று  பாக்யாவுக்கு கிடைத்த பாராட்டை தட்டிப் பறிக்கும் விதமாகப் பேசுவார். மாமனார் ராமமூர்த்தியும் இவளர் திருந்தவே மாட்டாள் போல என்று விட்டுவிடுவார். 

அப்போது, கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா, மாமியார் ஈஸ்வரி பாக்யாவிடம் பேசியதைக் குறிப்பிட்டு, உங்களுக்கு அவங்க மேல கோபமே வராதா என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பாக்யா, “சில நேரங்களில் கோபம் வரும், ஆனால், நம்ம அத்தை தானேன்னு விட்ருவேன்” என்று கூறுகிறார். இதைக்கேட்ட பாக்யா, “என்னது, நம்ம அத்தையா?” என்று ஆச்சரியத்துடன் கேட்பார்.

இதுவரை பாக்யா, கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவிடம் தனது குடும்ப உறவுகளில் பங்கு கொடுக்கும் விதமாகப் பேசியது இல்லை. ஆனால், பாக்யா இப்போது, ராதிகாவிடம் மாமியார் ஈஸ்வரியை  ‘நம்ம அத்தை’ என்று கூறி இருப்பது, குடும்பத்தில் ராதிகாவுக்கும் பங்கு கொடுத்திருப்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. 

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவும் ராதிகாவும் முன்பொரு காலத்தில் தோழிகளாக இருந்தாலும், கோபியை ராதிகா திருமணம் செய்து கொண்டபின், இதுவரை எதிரிகளைப் போல செயல்பட்டு வந்த நிலையில், இப்போது பாக்யாவே ராதிகாவுக்கு குடும்பத்தில் அத்தை என்ற உறவை பங்காகக் கொடுத்து அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார புரோமோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment